.

புரியாத வயதில் மனதில் புரிந்தும் புரியாமல் ஒட்டிக் கொண்ட படம்.கதை இன்னது என்று அறியாமலே இறுதிக்கா ட்சி மனதை வெகுவாக குடைந்து விட்டது. சிறு பிள்ளையின் கையில் ஒரு துண்டு கடிதம் ஒன்று மணப்பெண் சரோஜா தேவி இடம் கொடுத்தனுப்ப படுகிறது.திருமண முடிந்த கையோடு கடிதம் பார்த்து பிள்ளையுடன் வேகமாய் மண்டப வாசல் வெளிவர ....தூரத்தில் ஜெமினி சென்றுகொண்டிருக்கிறார் . அழைக்க எத்தனிக்கும் போது நாகேஸ்வரராவ் கையை பிடித்து தடுத்து விடுகிறார்.பின்னாளில் தான் இது ஒரு அருமையான விட்டுக்கொடுக்கும் முக்கோணக் காதல் கதை என்று புரிந்தது.இதன் கன பரிமாணம் அதிகமே.தமக்கைக்கு அவள் அறியாமலே காதலை விட்டுக்கொடுத்து,விலகி வேறு ஒருவனை மணந்த நிலையில் தமக்கை இறந்த நிலையில் அவளது பிள்ளையை இவளிடம் சேர்ப்பித்து காதலன் பிரிந்து போகும் இடமே அந்த இறுதி காட்சி. அந்தச் சிறு பிள்ளையே அவளின் கல்யாண பரிசு. இப்படி ஒரு முடிவு தீர்கத்தை தமிழ் படங்கள்தான் அன்றும் அளித்தது,இன்றும் அளிக்கிறது. இடை இடையே தங்கவேலு ,எம்.சரோஜாவின்,மன்னார் கம்பெனி,எழுத்தாளர் பைரவர் நகைச்சுவை காட்சிகள் வெகு பிரசித்தி பெற்றவை.ஆப்பிள் ஜூஸ் ..என்னும் நக்கல் இன்றும் சுவைக்கத் தகுந்தது.. பாடல்கள் இன்றும் கேட்க ,பொருளுடன் இனிமை மிகுந்தது.
நினைவில் நிற்பது: காதலிலே தோல்வியுற்றால் ....
சிறப்பு பாடல்கள்; உன்னைகண்டு நான் ஆட...
துள்ளாத மனமும் துள்ளும்..
வாடிக்கை மறந்ததும் ஏனோ...
No comments:
Post a Comment