எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இசையில்
 |
| இன்று ஜானகி |
 |
| அன்று ஜானகி |
எஸ்.ஜானகி அம்மாவின் தமிழ் திரை பாடல் காலம் ஒரு வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் கண்ட ஒரு நீண்ட அழகுற அமைந்த பயணம் என்றே கொள்ளலாம். இந்த சிறப்பு இவர் ஒருவருக்கே சேரும். தன வெகு இளைய பிராயத்தில் பாதை தெரியுது பார் படத்தில் , 'மாசில் வீணையும் மாலை மதியமும் ...பாடி [உடன் இறுதி பகுதியில் ஜி.ராமனாதனும் பாடியிருப்பார்.] சிறப்பான இடத்தை தொட்டு, கொஞ்சும் சலங்கையில் , 'சிங்கார வேலனே தேவா ....என்று காரைக்குறிச்சி அருணாச்சல நாதஸ்வர இசையோடு அதி பிரபலமானார். 'போலீஸ்காரன் மகனில் , இவருக்கு மட்டுமே பெண்குரல் வாய்ப்பு கொடுக்கப்பட்டு கௌரவம் அடைந்தார். ஏனோ வானம் பாடியில் ,சுசீலாவின் கங்கைகரைதோட்டம் பாடல் முன்னம் ,தெய்வத்தின் தெய்வம் படத்தில் இவர் பாடிய 'கண்ணன் மனநிலையை தங்கமே தங்கம் ...பாடல் போதுமான வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம்.
இருப்பினும் எம்.எஸ்.வி.யால் அவ்வப்பொழுது கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்தி , ஆலயமனியில், 'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே...., அவளுக்கென்று ஒரு மனம் படத்தில், 'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ...என்றெல்லாம் பாடி அழியாத தடம் பதித்து வந்தார். இளையராஜா அன்னக்கிளியுடன் வந்தாரோ இல்லையோ இவரது மறுமலர்ச்சி காலம் பொற்காலம் என்றே சொல்லலாம்.
அன்னக்கிளி உன்னைத் தேடுதே .... என்று துவங்கி இன்றுவரை பெரிய சூறாவழிப் பயணம் கொண்டார் என்றால் மிகையாகாது. பக்தி பாடலிலும் 'திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே.....,வல்லமை உள்ளமே நீதானையா....போன்ற பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.
கோதைதனபாலன்
http://www.youtube.com/watch?v=CdHwIplFtik&feature=fvst
No comments:
Post a Comment