Search This Blog

Saturday, April 28, 2012

திரையில் காதல் இலக்கியம் நேற்றுவரை...

இந்தக் காதல் படுத்தும் பாடு அன்றைய இலக்கியத்திலிருந்து
இன்றைய திரை இலக்கியம் வரை சொல்லி மாள முடியாது.
எத்தனை ஆனாலும் நினைவில் நிற்பவை ஒரு சிலதே.
எனக்கு நினைவில் தெரிந்த முதல் காவியம் திரையில்
தேவதாஸ். சோகம் சொல்லி மாளாது அந்த உண்மைக் காதல் கதைக்கு.
பாடல்கள் இனிமையானவை. பிறகு வெற்றி பெரும் காதலை விட
விட்டுக் கொடுக்கும் காதல் தமிழ் திரையை புரட்டி எடுத்தது.
கல்யாணப் பரிசு, நெஞ்சில் ஓர் ஆலயம், ஆலயமணி சொல்லிக் கொண்டு போகலாம்.
பாடல்கள் வெகு பொருத்தமாய் தமிழில் அமைந்து வெற்றி பெற்றதென்றால் மிகையாகாது.
ஆண் , பெண் இரு கதா பாத்திரப் படைப்புகளுமே சம கன பரிமாணத்தில் இருந்தன.
குறிப்பாக காதலை தியாகம் செய்வதில், கடவுள் தந்த இருமலர்கள், இருகோடுகள் ,
முதலியன. போராடி வெற்றி பெரும் காதல் ராஜா நாகம், அலைகள் ஓய்வதில்லை ,காதலுக்கு மரியாதை
இந்த வரிசை தந்தது கால மாற்றம். காதல் கோட்டை, காதல் ஓவியம் உள்ளபடியே நவீன பெருமையான காவியங்கள்.
ஒரு தலை ராகம் ...தனி வழியில் காதலுக்கு அணிமரியாதை செய்தது எனலாம்.
ஆனால் இப்பொழுது வருவது ...நினைக்கவே வேண்டாம்..இனிமை கெட்டு விடும்.


http://www.youtube.com/watch?v=hCladlTAOnw 
Song: Kaalamellam Kadhal / Nee kathali Movie: Kathal kottai (1996) Language: Tamil ...First song from the movie. Some of the texting overlapped part of the v...

No comments:

Post a Comment