Search This Blog

Thursday, May 3, 2012

நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சி.....

தொடக்க காலங்களில் தமிழ் திரைப் பட உலகில் இருந்த பாடல்கள்
கர்நாடக சங்கீத அடிப்படையிலும்,வடமொழிச் சொல் கலப்புமாக அமைந்திருந்தன.
எம்.கே. தியாகராஜ பாகவதர் ,எம்.எஸ். சுப்புலட்சுமி போன்றோர் தங்கள் இனிய குரல் வளத்தால்
அற்புதமாக பாடி திரை உலகில் ப...
வனி வந்தனர். பின்னர் மெதுவாக ஐம்பதுகளில் என்று சொல்லலாம் ,
கே. வி. மகாதேவன் போன்றோர் இசையமைப்பில் அன்றைய கிராமத்துப் பண்கள் இனிமையாக அரங்கேறின.
இனிய தமிழும் நடை பயில துவங்கிற்று எனலாம்.எம்.எஸ். விசுவநாதன், டி. கே. ராமமூர்த்தி இசைஅமைப்பில்
அடித்தளத்தில் கிராமப்புற மெட்டுடன் சற்று கர்நாடக இசையும் கலந்து நவீன இசை அமைப்பில்
அதி அற்புதமாக பாடல்கள் மட மடவென அரங்கேறின.கவியரசின் பாடல்களும் ,வாலி,மருதகாசி போன்றோரின்
சிந்தனை எழுச்சியுறும் பாடல்களும் அவற்றிற்கு உறுதுணை புரிந்தன என்றால் மிகையாகாது.
தமிழ் சொற்களும், இலக்கிய காட்சிகளும் மக்கள் பார்வைக்கு பெரிதும் அறிமுகமாயின.
ஒரு விளைவு யாதெனில் சமயத்தில் எல்லாப் பாட்டும் ஒன்றே போல் தோன்றும்.
பாவங்கள் மாட்டுமே உணர்சிகளில் மாற்றத்தைக் காண்பித்து பாடலைச் சற்று வேறுபடுத்திக் காட்டியிருக்கும்.
பிறகு வருகிறார் இளையராஜா. இன்றளவும் எல்லாத்தட்டு மக்களையும் தன பாடல்களால்
மனம் கவர்ந்து கொண்டிருக்கிறார். யதார்த்தமான கிராமப் பாடல்களின்
இனிய பாவங்களையும்,எளிமையான சொற்களின் ஆளுமைத்தன்மையையும்
குண்டுமணி அளவும் குறையாமல் நவீன இசை அமைப்போடு மேலும் மெருகேற்றி தந்து கொண்டிருக்கிறார்.
இவையெல்லாம் நம் தமிழ்ப் பாடல் வளர்ச்சியை ஒரு சமூக வளர்ச்சியாகவே காட்டி வந்துள்ளது.
வேதாவும் ,ரகுமானும் ஓரளவு தமிழில் அதைக் கடைப் பிடுத்து வருகின்றனர். வைரமுத்து பாடல்களும்
அவற்றோடு அணிசேர்ந்து வருகின்றது. இவை என்றென்றும் மாறாதது என்று நம்புவோம்.
http://www.youtube.com/watch?v=d8c2cFeUSnQ&feature=player_detailpage 
 

No comments:

Post a Comment