Search This Blog

Monday, May 28, 2012

அன்றும் இன்றும் ஒன்றே போல்

தமிழ் திரைப் பாடல்களில் வெளிப்படுத்தப் பட்டுள்ள சில
மனித இயல்புகள்,உணர்வுகள் இவற்றை கூர்ந்து கவனித்தால்
அன்றும் இன்றும் ஒன்றே போல் ஏற்றுக் கொள்ளக் கூடிய பண்புகளை
நாம் உணரலாம்.'எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே...'
மலைக்கள்ளனில் வரும் பாடல் தரும் கருத்துக்களை இன்றும் மறுக்க முடியாது..
பராசக்தி படத்தில்,'தேசம் ஞானம் கல்வி பாடலில்....
முட்டாப் பயலை எல்லாம் காசு முதலாளி ஆக்குது....' உண்மைதானே.
'கடவுள் ஏன் கல்லானர் ....என்று ஒரு பாடலில் சொல்லி...'தெய்வம் என்றால் அது தெய்வம்..
சிலை என்றல்வெறும் சிலைதான்.. உண்டென்றால் அது உண்டு ..இல்லை என்றால் அது இல்லை.
இன்றும் பலரிடம் வேண்டும்போது இறையுணர்வு வருகிறது...தேவை இல்லை என்றால் போய்விடுகிறது.
மனசாட்சிக்கு தமிழில் மதிப்பு அதிகமே.'நல்லவர்க் கெல்லாம் சாட்சிகள் இரண்டு,ஒன்று மனசாட்சி;ஒன்று
தெய்வத்தின் சாட்சியம்மா..நம்பிக்கை வைத்து கல்லையும் பார்த்தால் தெய்வத்தின் சாட்சியம்மா..
அதுதான் உண்மையின் சாட்சியம்மா..!அற்புதமான விளக்கம்.தெளிவான சிந்தனை கொண்டவர்க்கும்,
ஆற்றல் உள்ளவர்க்கும் ,'மூன்றேழுத்தில் என் மூச்சிருக்கும்,அது முடிந்த பின்னாலும் பேச்சிருக்கும் .....
கடமை அது கடமை....!நிதானமான உள்ளம் விரும்புவர்க்கு ஒரு அருமையான பாடல்,
'ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு.....' வாழ்க்கை என்றால்
ஆயிரம் இருக்கும் ...என்று சாந்தப் படுத்தும் பாடலும் உண்டு. மரணம் பற்றி....வாழ்க்கை என்பது வியாபாரம்
அதில் ஜனனம் என்பது வரவாகும் அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா...!
'செய்யும் தொழிலே தெய்வம் ..அதன் திறமைதான் நமது செல்வம்....' என்றும் வாழும் நெறிமுறையும்
நேருறுத்தி வைக்கப் பட்டது. ',
தங்கத்திலே ஒரு குறை இருந்தாலும் அது தரத்தினில் குறைவதுண்டோ...என்று பக்குவப் படுத்தி இன்று ,
'ஒவ்வொரு பூக்களுமே சொல்லிடுதே ..வாழ்வென்றால் போராடும் போர்களமென்று...வெற்றி காண வைக்கிறது.


http://www.youtube.com/watch?v=c6msmJL6BUQ 

ovoru pookalume solkirathe
www.youtube.com

No comments:

Post a Comment