Search This Blog

Monday, June 18, 2012

இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்.......


கலித்தொகையில் உள்ள காதல் பாட்டுக்கள்
நல்ல சொல்லோவியங்களாயும் இனிய
ஓசைநயம் உள்ளவையாகவும் உள்ளன,
தான் கைப் பிடித்த காதலனுடன் வாழ சென்றுவிட்ட மகளை
நினைத்து கலங்கும் தாய் ஒருத்திக்கு பெரியவர் இவ்விதம் ஆறுதல் சொல்கிறார்...

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுமே பிறப்பினும் மலைக்கவைதான் என்செய்யும்
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே .

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்
தேருங்கால் நுமக்கும் நும் மகள் அலைய ளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுமே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்
சூழங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ..

சுருக்கமாக , ஒன்றில் பிறந்த ஒன்று அதற்கு பயன்படாது இருத்தல்
ஒரு இயல்பே என்று அவளுக்கு அறிவுறுத்துகிறார்.

மலையின் சந்தனம் நாம் பூசிக்கொள்ளவன்றி மலைக்கல்ல

கடல் தரும் முத்து நாம் அணிய அன்றி கடலுக்கல்ல
யாழிலிருந்து இசை பிறந்தால் அது மற்றவர் கேட்பதற்கே அன்றி யாழுக்கல்ல.

இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்.......
http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y  

அந்த சிவகாமி மகனிடம் - Antha sivagami maganidam
www.youtube.com 
Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned b...

No comments:

Post a Comment