ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி ... ஆயிரம் இருக்குது சுபதினம்..அடுத்தவர் நலனை நினைப்பவர் தமக்கு ஆயுள் முழுவதும் சுபதினம்... என்று சொல்லி ...வள்ளுவர் முதல் புத்தர் தொடர்ந்து... காந்தி ...நமக்கு விடுதலை வாங்கித் தந்த நாள் சுபதினம்... உழுது வாழ்வோருக்கு அறுவடை தினம் சுபதினம்...பாமர மனிதனுக்கு லாட்டரி சீட்டில் லக்ஷம் விழுந்தாலும்... வள்ளல் கையில் கோடி கோடி இருந்தால் அது எளியவர்க்கு சுபதினம்..... என்றெல்லாம் சொல்லிவிட்டு...நிறைகுடம் போல் ஒரு திரைப்படம்...இந்த இடத்தில இருபொருள்பட பாட்டு வருகிறது. சிவாஜி அந்தப் பெயரில் அவ்வமயம் நடித்திருந்தார்..ஒன்று. இன்னொன்று தர்கா ரீதியாக யோசித்தால்...அந்தச் சொல்லின் அர்த்தம் குறைவில்லாத ஒன்று. அப்படி ஒரு திரைப்படம் வந்தால் ரசிகருக்கு அதுதான் சுபதினம்....உண்மைதானே.
இது யு ட்யூபில் கிடைக்காததால் எனது படங்களை வைத்து நானே இந்த பாட்டிற்கு வீடியோ பதிவு செய்துள்ளேன். இது சுபதினம் படத்தில் சீர்காழி கோவிந்தராஜன் பாடியது.
கோதை தனபாலன்