Search This Blog

Tuesday, June 26, 2012

அனுபவ முத்திரைகள்: சீர்காழி கோவிந்தராஜன்

அனுபவ முத்திரைகள்: சீர்காழி கோவிந்தராஜன்:   சீர்காழி கோவிந்தராஜன்     அன்றைய காலத்தில் ,’நீ அல்லால் தெய்வம் இல்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை ,முருகா !..’ என்று பாடி இறுதி வரை பல...

சீர்காழி கோவிந்தராஜன்

 சீர்காழி கோவிந்தராஜன்
Photo: சீர்காழி கோவிந்தராஜன் 

அன்றைய காலத்தில் ,’நீ அல்லால் தெய்வம் இல்லை ,எனது நெஞ்சே நீ வாழும் எல்லை ,முருகா !..’ என்று பாடி இறுதி வரை பல தெய்வப் பாடல்கள்  தந்தவர். இவர் தமிழ் திரை வானிலும் பல இன்னிசை பாடல்களை நமக்குத் தந்தவர். எனக்குத் தெரிய இவரது முதல் திரைப் பாடலாய் நான் ரசித்தது , ‘அமுதும் தேனும் எதற்கு ...’ தை பிறந்தால் வழி பிறக்கும் படத்தில். உயரிய ராகத்தில் ,தெளிவான உச்சரிப்பில் , கணீரென்று அன்று பாடியது இவர் ஒருவரே. அந்த இடத்தை இன்னும் யாரும் பிடிக்கவில்லை என்றே சொல்லலாம். பிறகு வரிசையாக, ‘சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ... ‘ நல்லவன் வாழ்வானிலும், ‘தங்கக் கிளியே மொழி பேசு ...’ வீரக்கனல், ‘செங்கனிவாய் திறந்து சிரிதிடுவாய் .....’இது, யானைப் பாகனில்.. தத்துவப் பாடலாய் ,’ உழைப்பதிலா உழைப்பை பெறுவதிலா இன்பம் உண்டாவதேங்கே சொல் என் தோழா.....’ மன்னாதி மன்னன்.; ’சமரசம் உலாவும் இடமே...’ ரம்பையின் காதல். ‘சிரிப்பவர் சில பேர் அழுபவர் பல பேர்....‘ சபாஷ் மாப்பிள்ளே, ‘ஆடி அடங்கும் வாழ்க்கையடா...’நீர்க்குமிழியை  மறக்க முடியுமா....!  நாட்டுப் பாடல்களை திரையில் இவர் பாடிய, ‘ ஆத்துல தண்ணி வர அதில் ஒருவன் மீன் பிடிக்க, ,காத்திருந்த கொக்கு அதைக் கவ்விக் கொண்டு போவதும் ஏன் கண்ணம்மா! ...வண்ணக் கிளியிலும், ‘பட்டணந்தான் போகலாமடி... ’எங்க வீட்டு மகாலக்ஷ்மியில் பாடிக் களித்தவர். ‘கண்ணே வண்ணப் பசுங்கிளியே .,கண்ணே  என் தாரகையே கண்ணு றங்காயோ....’யானை வளர்த்த வானம பாடி ...நெஞ்சை இன்னும் தாலாட்டுகிறது. அறுபடை வீடு கொண்ட.....முருகனைத் தொடர்ந்து , கர்ணனைக் கொன்ற பாவியாய் கண்ணபிரானை மனம் உருகிபாடச் செய்த  ,’உள்ளத்தில் நல்ல உள்ளம் உறங்காதென்பது......  இவர் பாடல்களை கேட்பவர்க் கெல்லாம் விளங்கும்.
‘தொட்ட இடம் துலங்க வரும்  தாய்க் குலமே வருக......பாடல், ஆண்டுக்கு ஆண்டு தேதிக்கு தேதி......இவர்தம் பாடல் மனதில் நிழலாடாத நெஞ்சமில்லை. 



 

Monday, June 25, 2012

அனுபவ முத்திரைகள்: எம்.எஸ்.விசுவநாதன்

அனுபவ முத்திரைகள்: எம்.எஸ்.விசுவநாதன்: எம்.எஸ்.விசுவநாதன் முதன் முதலாய் இந்தப் பாடலை இசையமைத்தவர் யார் என்று நான் கேட்டறிந்தவர் இந்த எம் எஸ் வி . படம் பாலும் பழமும். பாடல் ....

எம்.எஸ்.விசுவநாதன்



எம்.எஸ்.விசுவநாதன்


முதன் முதலாய் இந்தப் பாடலை இசையமைத்தவர் யார் என்று நான் கேட்டறிந்தவர் இந்த எம் எஸ் வி . படம் பாலும் பழமும். பாடல் ....'பாலும் பழமும் கைகளில் ஏந்தி ....' 'ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன். பின்னர் 'கொடியசைந்ததும் காற்று வந்ததா ...'எனக் கேட்டு ,'அன்று ஊமைப் பெண்ணல்லோ ,இன்று பேசும் பெண்ணல்லோ...என வீச்சு நடை போட்டது. இவருக்கென்று தனி சூத்திரம் ஒன்றை இவர் பாடல்களைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அறியலாம். ஒரு கிராமத்து பாடல் மெட்டை மூலதனமாகக் கொண்டு, அதற்கு தானறிந்த ராகங்களை பல வண்ணக் கலவையில் சேர்த்து அன்றைய நவீன இசை சேர்த்து பல பாவங்களில் பாடல்களை வெளிக் கொணர்வார். 'தாழையாம் பூமுடித்து ...' 'அம்மாடி பொண்ணுக்கு தங்க மனசு....'
சரி, முற்றிலும் நவீன இசை பாவத்துடன் பாடல் கேட்டவருக்கு ,'கேட்டவறேல்லாம் பாடலாம் என் பாட்டுக்குத் தாளம் போடலாம்....'
உயர்ந்தமனிதனில்,' நாளை இந்த வேளை ....'சுசீலா அம்மையாருக்கு தேசிய விருது வாங்கிக் கொடுத்தது. கர்ணன் படப் பாடல்களில்...எதைத்தான் விடுவது....?உள்ளத்தில் நல்ல உள்ளம்...'அல்லவா. தங்கப் பதக்கத்தில், அன்றையஇந்திப் பாடல்கள் தாக்கத்தையும் மீறி, 'நல்லதொரு குடும்பம்,பல்கலைக்கழகம்...', அடி ராக்கு என் கண்ணு.,என் மூக்கு....' பாடல்கள் கேட்பவரை இன்னும் தாளம் போடா வைக்குமே. உலகம் சுற்றும் வாலிபனில் கர்ணன் போன்று அத்தனையும் நவீன இசை அமைப்பில் மறக்க முடியாதன ஆயின.'பச்சைக் கிளி ,முத்துசரம்.முல்லைக் கோடி யாரோ...' தத்துவப் பாடலா ...சட்டி சுட்டதடா கை விட்டதடா ...என்றெல்லாம் பாடல் தந்து ,'தெய்வம் தந்த வீடு வீதியிருக்கு ..'என்றும் சொன்னவர்தாமே..அபூர்வ காதலை அபூர்வ ராகங்களில் அதிசயமாய், நளினமாய் கவியரசு பாடல் 'அதிசய ராகம் ஆனந்த ராகம்..... 'காதில் ரீங்காரமாய் இன்றும் அல்லவே ஒலிக்கிறது. இந்த இன்னிசை மன்னர் அந்த வெண்கலக் குரலோனுக்கு உற்சாகமாய் தந்த பாடலை யார்தான் கேட்காமலிருப்பர்.....ம்ம்ம் இன்னும் சொல்லத்தான் நினைக்கிறேன் முடியவில்லை.......



http://www.youtube.com/watch?v=A2Dq4CzZLaQ






Friday, June 22, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்: கண்ணதாசனுக்கு கண்ணன் மீது கடைசி வரை பிரேமையே . கோபியர் கண்ணனை வெகுவாக ரசிப்பார். வானம் பாடியில்'கங்கைக் கரை தோட்டம்.கன்னிப் பெண்கள் கூட்ட...

Monday, June 18, 2012

அனுபவ முத்திரைகள்: இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்...

அனுபவ முத்திரைகள்: இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்...: கலித்தொகையில் உள்ள காதல் பாட்டுக்கள் நல்ல சொல்லோவியங்களாயும் இனிய ஓசைநயம் உள்ளவையாகவும் உள்ளன, தான் கைப் பிடித்த காதலனுடன் வாழ சென்றுவிட்...

இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்.......


கலித்தொகையில் உள்ள காதல் பாட்டுக்கள்
நல்ல சொல்லோவியங்களாயும் இனிய
ஓசைநயம் உள்ளவையாகவும் உள்ளன,
தான் கைப் பிடித்த காதலனுடன் வாழ சென்றுவிட்ட மகளை
நினைத்து கலங்கும் தாய் ஒருத்திக்கு பெரியவர் இவ்விதம் ஆறுதல் சொல்கிறார்...

'பலவுறு நறுஞ்சாந்தம் படுப்பவர்க்கு அல்லதை
மலையுமே பிறப்பினும் மலைக்கவைதான் என்செய்யும்
நினையுங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே .

சீர்கெழு வெண்முத்தம் அணிபவர்க்கு அல்லதை
நீருளே பிறப்பினும் நீர்க்கு அவைதாம் என் செய்யும்
தேருங்கால் நுமக்கும் நும் மகள் அலைய ளே

ஏழ்புணர் இன்னிசை முரல்பவர்க்கு அல்லதை
யாழுமே பிறப்பினும் யாழ்க்கு அவைதாம் என்செய்யும்
சூழங்கால் நும் மகள் நுமக்கும் ஆங்கு அனையளே ..

சுருக்கமாக , ஒன்றில் பிறந்த ஒன்று அதற்கு பயன்படாது இருத்தல்
ஒரு இயல்பே என்று அவளுக்கு அறிவுறுத்துகிறார்.

மலையின் சந்தனம் நாம் பூசிக்கொள்ளவன்றி மலைக்கல்ல

கடல் தரும் முத்து நாம் அணிய அன்றி கடலுக்கல்ல
யாழிலிருந்து இசை பிறந்தால் அது மற்றவர் கேட்பதற்கே அன்றி யாழுக்கல்ல.

இதைப்படிக்கும் போது நினைவில் வந்த கவியரசரின் பாடல்.......
http://www.youtube.com/watch?v=rm0jGFq1z3Y  

அந்த சிவகாமி மகனிடம் - Antha sivagami maganidam
www.youtube.com 
Disclaimer: The video clips are posted for viewing pleasure and as an archive for good old Tamil songs. By this I don't wish to violate any copyright owned b...

Wednesday, June 13, 2012

அனுபவ முத்திரைகள்: சாவைப்பற்றி பாடும் சாகாவரத் தமிழ் பாடல்கள்

அனுபவ முத்திரைகள்: சாவைப்பற்றி பாடும் சாகாவரத் தமிழ் பாடல்கள்: சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய் அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்...

சாவைப்பற்றி பாடும் சாகாவரத் தமிழ் பாடல்கள்


சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண
்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
... பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!
சாவை பற்றி பாடி சாகாவரம் பெற்ற பாடல் நிறைய
தமிழ் படங்களிலும் உண்டு. நான் அறிந்தவரை வெகு சாதாரனமாய்
அர்த்தமுள்ள வரிகள் எடுத்தாளப் பட்டுள்ளன. இரவும் பகலும் படத்தில் ,
எஸ் எ அசோகன் பாடிய ,'இறந்தவனை சுமந்தவனும் இறந்திட்டான், அதை
இருப்பவனும் எண்ணிப் பார்க்க மறந்திட்டான்...'எவ்வளவு யதார்த்தமான வரிகள்.
பாதகாணிக்கையில் கவியரசு பாடலில் .''''........விட்டு விடும் ஆவி ,,,பட்டு விடும் மேனி ..
சுட்டு விடும் நெருப்பு ,சூனியத்தில் நிலைப்பு..'
என்ன தத்து வார்த்தமான சிந்தனை. ஆலயமணியில் விரும்பி
சாவைத் தேடுபவன் மன நிலை,
'.... ஆரவாரப் பேய்களெல்லாம் ஓடிவிட்டதடா ..
ஆலயமணி ஓசை நெஞ்சில் கூடிவிட்டதடா..தர்மத்தேவன்
கோயிலிலே ஒலி துலங்குதடா மனம் சாந்தி சாந்தி
என்று ஓய்வு கொண்டதடா...' அமைதியின் தேடல் இது ஒரு
பக்குவப் பட்ட மனநிலை. மனதை துன்புறுத்தும் சாவை
விரட்டி அடிக்கும் வரிகள்...' போனால் போகட்டும் போடா...
வதவறேல்லாம் தங்கி விட்டால் இந்த மண்ணில் நமக்குஇடமேது..
வாழ்க்கை என்பது வியாபாரம் ..வரும் ஜனனம் என்பது வரவாகும்
அதில் மரணம் என்பது செலவாகும் ..போனால் போகட்டும் போடா..!
சாவை ஒரு துச்சமாய் நினைக்கும் பாங்குஇது . சில உறவுகளின் பிரிவுகள்
யாருக்கும் பொதுவான மனநிலையைக் கொடுக்கும். சில ஊர் மக்களிடம்
அமரத்துவமான மன நிலை அளிக்கும். அப்படியான பாடல்...'ஒருவர் வாழும் ஆலயம் ,
உருவம் இல்லா ஆலயம் ,நினைத்து வாழும் ஆலயம் .. நெஞ்சில் ஓர்ஆலயம் ,'
நல்லதொரு மருத்துவரை இழந்து தவிப்பதாய் வரும் பாடல்..!

http://www.youtube.com/watch?v=Gk5sNk-2USU