Search This Blog

Saturday, September 19, 2020

#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் சில

 பொழுது போக்க சில படங்கள் என்று சொன்னால் அந்த கட்டமைப்பில் வெளியான பல திரைப்படங்களில் நான் மிகவும் ரசித்த சிலவற்றில் அதிகமாக மனதில் இனியதொரு தாக்கம் தந்த வரிசையில் முன்னிருப்பது ,

"காதலிக்க நேரமில்லை ."
இயக்குனர் ஸ்ரீதர் கைவண்ணத்தில் . சித்திராலய தயாரிப்பில். அதுவரைக்கும் சற்று அழுத்தமான உணர்வுகளை பதித்த வண்ணமே அவரது திரைப்படங்கள் அமைந்திருக்கும் . ஆனால் இதுவோ முற்றிலும் வேறுபட்டது . அன்றைக்குப் புதுமுகங்களான முத்துராமன் , காஞ்சனா , ரவிச்சந்திரன் ,ராஜ ஸ்ரீ இவர்களை கதாநாயகர்களாக கொண்டு நகைச்சுவையான திரைக்கதை அம்சத்தோடு வெளிவந்தது .இரு நண்பர்கள் பொய்நாடகம் நடத்தி காதலில் வெற்றி பெறுதல் ரசிக்கத் தக்கது .
அதுவும் நாகேஷ் , டி.எஸ். பாலையா இருவரும் சம்பந்தப்பட்ட நகைச்சுவை காட்சிகள் இன்றைக்கும் நயமான தரத்தில் நம்மை வாய்விட்டு சிரிக்க வைக்கும் .பாடல்கள் மெல்லஇசை மன்னர்கள் இசையில் மிகவும் அற்புதம் . வண்ணப்பிடிப்பில் ஊட்டி யின் அழகான இடங்கள் பல கோணங்களில் படமாக்கப்பட்ட விதம் அருமை .
பாடல்கள் அனைத்தும் புதுமைச். சுவையில் . அனுபவம் புதுமை ..பாடல் ஒரு மேற்கத்திய இசை தாக்கத்தில் , அதை ஒட்டி ஒரு துள்ளல் நடனம் குமாரி சச்சு , நாகேஷ் , " மலரென்ற முகம் ..' பாடலுக்கு அருமை . நாளாம் நாளாம் திருநாளாம் ..' இன்றும் கேட்க இனிமை ..நல்ல சுவை ...கவியரசர் வரிகளில் , ஜேசுதாஸ் , ஸ்ரீநிவாஸ் , ஈஸ்வரி , சுசீலா அவர்கள் பாடி அசத்தினாலும் .. சீர்காழி கோவிந்தராஜன் அவர்கள் குரலில் முத்துராமன் , மாறுவேடத்தில் காஞ்சனாவுடன் பாடி நடிக்கும் ம் ... " காதலிக்க நேரமில்லை , காதலிப்பார் யாருமில்லை ...' பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது . பாலையா அவர்களிடம் நாகேஷ் திரைக்கதை சொல்லும் இடம் ... என்ன நடிப்பு ..என்ன நடிப்பு ...! வேறு யாரும் இப்படி செய்திருக்க முடியாது . என்றென்றும் நினைத்து அசைபோடக்கூடிய படம் .
எங்க வீட்டுப்பிள்ளை .. எம்.ஜி. ஆர் அவர்கள் இரட்டை வேடம் . புரட்சி நடிகர் புரட்சி நடிகர்தான் . தன்னை கதாநாயகனாகவே காண்பிக்கும் திரையில்தான் இவர் நடிகையாவார் . அதற்கு ஏற்ற கதை , பாடல்களைத்தான் தெரிந்தெடுப்பார் . இதுவும் வண்ணப்படம் . கோழையாக ஒரு எம் ஜிஆர் ராமு என்ற பெயரில் , , தீரத்தோடு எம் ஜி ஆர் இளங்கோ என்ற பெயரில் , இடம் மாறி நம்பியாரை சாடும் இடங்களில் வெகு அற்புதமாக இருக்கும் . சரோஜா தேவி , ரத்னா அவர்கள் கதாநாயகிகளாக . தொய்வே இல்லாமல் கதை செல்லும் . பண்டரிபாய் கனிவு ஒரு பக்கம் , ரங்காராவ் மிடுக்கு ... வில்லத் தனங்கள் சற்று நகைசுவையாக ஒரு வித்தியாசமான அமைப்பில் கதை பின்னப்பட்டிருக்கும் . பாடல்கள் மெல்லிசை மன்னர்கள் . நான் ஆணையிட்டால் ..அது நடந்து விட்டால் ...' பாடல் பெரிய வரவேற்பை பெற்றது . உணவகத்தில் காசு தராமல் எம் ஜி ஆர் .. உணவருந்தி அடிக்கும் லூட்டி வெகுவாக ரசித்தேன் . வாலி , ஆலங்குடி சோமு அவர்கள் பாடல்கள் .சண்டைக் காட்சிகள் எம் ஜி யா ர்க்கே உரியது . அன்றைக்கு இதுபோன்ற கதையமைப்பிற்கே நான் பார்த்ததில் எம் ஜி ஆர் திரைப்படங்கள் அதிகம் .உலகம் சுற்றும் வாலிபன் பிறகு , அரசியலுக்கு வந்த பிறகு ...அவர் படங்கள் சோபிக்க வில்லை .
ஊட்டி வரை உறவு .... இயக்குனர் ஸ்ரீதரின் மற்றுமொரு நகைசுவை திரைப்படம் . நடிகர் திலகம் , முத்துராமன் , கே.ஆர். விஜயா, எல் விஜயலக்ஷ்மி ... கனடித்தது . கதை இவர்களை சுற்றி . பாலையா மகள் ...இடம் மாறி விடுவதால் வரும் பிரச்சனைகள் சுவையோடு சொல்லப்பட்டிருக்கும் .பாலையா, வி.கே. ஆர் ...சம்பந்தப் பட்ட நகைச் சுவை அருமை . மெல்லிசை மன்னர்கள் இசையில் ...." ஹாப்பி இன்றுமுதல் ஹாப்பி..." பெரிதும் வரவேற்பைப் பெற்றது . சுசீலாம்மா குரலில் , ' தேடினேன் வந்தது ..' இன்றும் எல்லோரும் விரும்பும் பாடலாக உள்ளது . நாகேஷ் வேடிக்கையான வில்லத்தனம் . இதுவும் ஊட்டியை சுற்றி பலகோணங்களில் படமெடுக்கப்பட்டது .' அங்கே மாலை மயக்கம்.. ' பாடல் காட்சியில் சில நொடிகளெவரும் பாலையா முகபாவம் சிரிப்பை வர வாழ்க்கைக்கும் .
மறக்கமுடியாது மனதில் அசைபோடும் திரைப்படங்கள் இவை .
கோதை தனபாலன்




 


 
 
 

#அன்றுமனதைப்பாதித்த சில திரைப்படங்கள் .

 அவள் ஒரு தொடர்கதை ..

நன்கு  திரைக் கதைகளை அலசிப் பார்க்கும் ஒரு பக்குவம்  என்னுள் வளர்ந்திருந்ததை  சில படங்களால் தெளிவுற அறிந்துகொண்டேன் .  அதுவரை பொழுதுபோக்க திரைக்கதைகள் , பாடல்கள் என்றே இருந்த எனக்கு , சமூகச் சாடலில் ஒரு அங்கமாக  , கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில்  வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை  திரைப்படம் ..பெண்மையின் மேன்மையை உரசிப் பார்க்கும் ஒரு  புதிய வெளிச்சத்தை  பார்க்கும் மக்களிடம் உருவாக்கியது . ஒவ்வொரு வசனமும் மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்தது . வீட்டிற்கு வந்து பல நாட்களாக என் மனம் இது பெண்மைக்கே வந்த சாபமோ என்று தோன்றியது . காரணம் அதை நடைமுறை வாழ்க்கையில்  நானறிந்த பெண் மருத்துவர்கள் வாழ்வில் கண்டுள்ளேன் . எவ்வளவு உண்மை 

தலைமகள்  சுஜாதா தனது சம்பாத்தியத்தில் அன்னான் தங்கைகள் , தாய் தந்தையரை பராமரிக்கிறார். பொறுப்பற்ற அன்னான் குடிகாரன் .    மனம் அதிர்ந்து போனேன் ..எவ்வளவு பெரிய உண்மையை துணிந்து சொல்லியும் பலனில்லை . காதலித்தவனையும் கைபிடிக்காது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறாள் . தனக்கென்று ஒரு மாப்பிள்ளை வர   இன்னொரு தங்கைக்கு முடித்து வைத்து , அண்ணனை பறிகொடுத்து , திருமணமான இன்னொரு தங்கை விதவைக்கு கோலம் ...திரும்பவும் இவள் வேலை , கடமையாக தொடர்கிறது .

பொறுப்பற்ற  பத்தாம் பசலித்தனமான பெற்றோரை நன்கு அடையாளம் காட்டியது .  கவியரசரின் பாடல் ..தெய்வம் தந்த வீடு ...  ஒவ்வொரு வரியும் இன்றைக்கும் நான் வியந்து ரசிப்பேன் ..  " ... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ....."

உதிரிப் பூக்கள் .

இயக்குனர் மகேந்திரன் அவர்கள் கைவண்ணம் . பொருத்தமான நடிகை அஸ்வினி .  நல்ல பாங்கான தோற்றம் . அமைதியான பெண் . புரிந்து கொள்ளாத கணவன் . இல்வாழ்க்கை அர்த்தமே புரியாத கணவன் . அன்பிற்கு  ஏங்கும் மனம்  , குழந்தைகள் மீதே அதீத பாசம் .... ஆக  மகிழ்ச்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாத கொடுமையான  வாழ்க்கை . முகபாவத்திலேயே  படம் முழுக்க நம்மை கவர்ந்திடுவார் . அடிப்படையில் பெண் மனது பற்றி அறியாமலே  தந்தை முடிவெடுத்து திருமணம் நடத்தி வைத்ததால் வேனும் யதார்த்த கெடுதலான விளைவுகள் ...ஊரறிய மெதுவாக அரங்கேறும் . இறுதியில் பஞ்சாயத்தார் கணவனான விஜயனையே ...தனக்கே  தண்டனையைத் தெரிந்தெடுக்க , திருந்தாத ஆணாதிக்க மனா நிலையில் நீரில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார் .  நம் மனதில் ஒரு கேள்வி ... வாழும் பெண் இப்படி விரும்பமாட்டாள் .... ஆனால் சமூகத்தில் சில விதிகள் இவ்வாறு விதிக்கப் படுகிறது .  

'' >>  அழகிய கண்ணே ! உறவுகள் நீயே .....'   இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் ... என் மனம் அழும் .

அழகி ...

எனது  பிந்திய நாட்களில் நான்  வியந்து ரசித்த ஒரு திரைப் படம் . மெலிதான  இளம் பிராய  காதல்  வெகு இயல்பாக ...   பார்த்திபன் காண்பித்திருப்பார் .   பின்னால் ஏழைக்  காதலன் வசதியு  டையவனாகிறான் ... வேறொருத்தியை மணந்து வாழ்கிறான் ....  சீமான் மகளோ  இன்னொருவனை மணந்து ஏழ்மை நிலைகுத்தி தள்ளப் பட்ட நிலையில் ...குழந்தைகள்   , வியாதி பீடித்த கணவன் இவர்களுடன் அபலையாக ..இவனை சந்திக்க .. அவளுக்கு இவன் நல்ல நிலைமை மகிழ்வைத் தருகிறது . அவனுக்கோ மனதில் ஒரு பூகம்பம் இவள் நிலை கண்டு . மெலிதான    அரும்பிய நிலையிலேயே விலகிய காதலுணர்வுகள்  மறுபடியும் மனங்களில்  வலுவில்லாத  நூலிழைகளாக தோன்ற அவர்களின் நல்வாழ்விற்கு இவன் கவனம் எடுத்து உதவுகிறான் . பார்த்திபன் நாயகனாக தேவயானி உண்மை அறிந்த மனைவியாக ..வங்க நடிகை   நந்திதா ..? அமைதியான முகவெட்டு அற்புதமாக நடித்திருப்பார் .மாணவப் பருவத்தில் படித்தவர்களும் அருமை .

விளம்பரம் அதிகம் இல்லாமலே   அதிக நாட்கள்  ஓடியது . வேறொருவர் சொல்லி இதை பார்த்தேன் ...இப்படி ஒரு கதையை திரைப்படமாகி வெற்றியும் கண்டா




பார்த்திபனை எண்ணி வியந்தேன் .

"...... ஒளியிலே தெரிவது ...',  " பாட்டுச் சொல்லி ....'  பாடல்கள் இன்னும் ஒரு புதுமையான ரசனையில் என் மனம் ரசிக்கும் .

kothaidhanabalan
(செம்மொழியாள்  )  .

#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் .

 என்னையு  மறியாமல் , ஏனென்றும் புரியாமல் பலமுறை பார்க்கவைத்த திரைப்படங்கள் மூன்று , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , உலகம் சுற்றும் வாலிபன் ,

திருவிளையாடல் ..  //      ஐந்துமுறை அடுத்தடுத்து விரும்பிப் பார்த்தேன் . இன்றைக்கு எழுதச்  சொன்னால் புராணங்களுக்கு நல்ல விளக்கம் , நல்ல நடிப்பு ,பாடல்கள் அருமை என்ற ரீதியில் சொல்லிச்செல்லலாம் . ஆனால் விமரிசிக்க இயலாத பருவத்தில் என் மனம் அதில் உள்வாங்கியது எதெதை என்று யோசித்து பார்க்கிறேன் .

 வண்ணப் படம் ஆரம்பக் காட்சி மிகவும் அழகு .  சம்போ மகா தேவா ...நந்தி , பூத கணங்களுடன். பாடல் காட்சி  மனதைத்தொட்டது .என்னைக் கவர்ந்த ஒன்று .

கே. பி. சுந்தராம்பாள் ...காட்சிகள் முதன்மையாக எனது இதயத்தை தொட்டன . கனி சம்பந்த வசனங்களும் ,  பழம் நீயப்பா ... பாடல்களும் ...நான் தலையசைத்து ரசித்தேன் .  '  ஆறுவது சினம் , கூறுவது தமிழ் ..." வரிகளில் ஒரு ஆளுமையை காட்சிக்கேற்ப அழகுற அமைந்தது கண்டு ரசித்தேன் .  நக்கீரன் , தருமி வசனம் , சிவ பெருமான் தருமி ..காட்சிகள் இன்றைக்கும் தனி சிறப்பு . எ.பி. நாகராஜன்  நக்கீரன் நடிப்பில் ஒரு அமைதியான கம்பீரம் கண்டேன் .  இறுதியில் சிவாஜி ..பாலையா  ...காட்சி என்னை மிகவும்  ரசிக்க  வைத்த ஒன்று . 

பாட்டும் நானே ...பாவமும் நானே ... பாடல் அனைத்திற்கும் முத்தாய்ப்பு ஆனது . அத்தனை பாடல்களும் அருமை கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .  டி.எம்.எஸ். , சுசீலாம்மா , ஜானகியம்மா , சீர்காழி கோவிந்தராஜன் , டி ஆர். மகாலிங்கம் , பாலமுரளி கிருஷ்ணா , பி.பி. ஸ்ரீனிவாஸ் ...அத்தனைபேரும் கே பி எஸ் பாடல்களுடான் பவனி வந்தது ...ஒரு அருமையான உணர்வைத் தந்தது என்றும் சொல்லலாம் .

ஒரு சின்ன நெருடல் இந்தப் படத்தில் எனக்கு உண்டு . ஓஎகே தேவர் ...சாவித்திரி , சிவாஜி சம்பந்தப் பட்ட காட்சி . யாகத்திற்கு அழைப்பில்லை .. என்ற பிரச்னை . அதில்   

.கணவன் பேச்சை மீறி தகப்பன் வீடு சென்றதால் பார்வதிக்கு கிடைத்த தண்டனை ... என்று முடிவெடுத்து பேசும் வசனம் ...இன்றைக்கும் சரியானது அல்ல என்றே  எண்ணத் தோன்றுகிறது . ஆணாதிக்க சிந்தனை அவ்வளவே . மற்றபடி  சிவாஜியின் திருவிளையாடல் ..திரைத்துறையில் முதன்மையாக என்னை பாதித்த படம் .

தில்லானா மோகனாம்பாள் ...//     சமூகக் கதை . கலைகளின் வழி ...தமிழருக்கே உரிய நாதஸ்வரம் , பரத நாட்டியம் ..கலைஞர்களிடம் மெலிதாக இழையோடிய காதல் கதை . பத்மினி அவர்களின் நாட்டியம் , சுசீலாம்மாவின் பாடல்கள்  என்னை திரும்பவும் பார்க்க .வைத்தன  இரண்டுமுறை விரும்பி சென்று பார்த்தேன் . சிவாஜி , பாலையா, பத்மினி ...ரயில் வண்டி காட்சிகள் ,  நம்பியார் மாளிகையில் நாயனா வாசிப்பு , நாகேஷின் நயமான வில்லத்தனம் ..தனி சிறப்பாக மனோரமா ..ஜில் ஜில் ராணி ...டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ....ஈஸ்வரி அம்மா குரலில் .. குரலில் பாடி ஆடி நடித்தது .. நல்ல ரசனை .  புதுமையை நோக்கி நகர்ந்த காலத்தில் பழமையைப் பாராட்டி வெற்றி கண்டா படம் . கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .

உலகம் சுற்றும் வாலிபன் .. //         மூன்று முறை அடுத்தடுத்து பார்த்தேன் .  ஒரு உண்மை எனக்கு புரட்சி நடிகர்  கதையில் ... எப்போதுமே எதையும் வென்றெடுக்கும் குணம் பரவலாக இருப்பதை ரசிப்பேன் . அது இந்தப் படத்தோடு முடிந்தது . இதன்  பிறகு அவ்வளவாக நான் ரசிக்கவில்லை .  அன்றைக்கு இந்திப் படங்களுக்கு மட்டுமே  வ ண்ணப் படங்கள் , மற்றும் வெளிநாடுகளில் எடுக்கும் அனுமதி எளிதாக கிடைத்த வேளையில் , தமிழ் படங்களில் ஒரு தேக்க நிலை உருவாயிற்று . அது இசையிலும் பாதித்தது . இந்த சூழ்நிலையில் எம்.ஜி. ஆர்.  அவர்கள் நல்ல செலவில் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்தார் .  இரண்டு வேடங்களில்  அவருக் . கேற்ற கதையில் ஜனரஞ்சகமாக எடுத்திருந்தார் . ஜப்பானில் நடை  பெற்ற  உலக சந்தையை ..." உலகம் .. உலகம் .' பாடலில் அழகுற காண்பித்திருப்பார் .

தாய்லாந்து நடிகை ஒருவர் நடித்திருப்பார் . அவரது கொஞ்சும் தமிழ் என்னை வியக்கவைத்தது . வித்தியாசமான அவர் பங்களிப்பு மனம் கவர்ந்த ஒன்று . " பச்சைக்கிளி ...முத்துச்சரம் ..முல்லைக்கொடி யாரோ .."  பாடலில் அந்த ஊர் இசையும்  பயின்று வந்திருக்கும் . இவ்வளவு செலவிற்கும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில்  அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்து  பெரும் வெற்றியைத் தந்தன என்றால் அது மிகை இல்லை .

 இதற்குமுன் இத்யாதி சங்கதிகளை இந்தப்பெற்று இந்திப் படங்களே முன்னணியில் நின்று மக்களைக் கவர்ந்த நிலையில் , வடஇந்திய பெரும் கலைஞர்களும் இதில் கையாண்ட தொழில் நுட்ப படப்பிடிப்புகளை பாராட்டி வியந்து சென்றனர் .  இது எம் ஜி ஆர்    தமிழ்த் திரைக்கு ஒரு விளம்பர அளவில் அளித்த பெரிய  பங்களிப்பு என்றே சொல்லலாம் .

அன்றைய உணர்வுகள் அப்படியே இங்கே .

கோதை தனபாலன்