Search This Blog

Friday, February 24, 2012

அனுபவ முத்திரைகள்: எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இச...

அனுபவ முத்திரைகள்: எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இச...: இன்று ஜானகி அன்று ஜானகி எஸ்.ஜானகி அம்மாவின் தமிழ் திரை பாடல் காலம் ஒரு வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் கண்ட ஒரு நீண்ட அழகுற அமைந்...

எஸ்.ஜானகியின் வளர்ச்சியும்,மறுமலர்ச்சியும் திரை இசையில்

 இன்று ஜானகி
  அன்று  ஜானகி
எஸ்.ஜானகி அம்மாவின் தமிழ் திரை பாடல் காலம் ஒரு வளர்ச்சியும், மறுமலர்ச்சியும் கண்ட  ஒரு நீண்ட அழகுற அமைந்த பயணம் என்றே கொள்ளலாம். இந்த சிறப்பு இவர் ஒருவருக்கே சேரும். தன வெகு இளைய பிராயத்தில் பாதை தெரியுது பார் படத்தில் , 'மாசில் வீணையும் மாலை மதியமும் ...பாடி [உடன் இறுதி பகுதியில் ஜி.ராமனாதனும் பாடியிருப்பார்.] சிறப்பான இடத்தை தொட்டு, கொஞ்சும் சலங்கையில் , 'சிங்கார வேலனே தேவா ....என்று காரைக்குறிச்சி அருணாச்சல நாதஸ்வர இசையோடு அதி பிரபலமானார். 'போலீஸ்காரன் மகனில் , இவருக்கு மட்டுமே  பெண்குரல் வாய்ப்பு கொடுக்கப்பட்டு கௌரவம் அடைந்தார். ஏனோ வானம் பாடியில் ,சுசீலாவின் கங்கைகரைதோட்டம் பாடல் முன்னம் ,தெய்வத்தின் தெய்வம் படத்தில் இவர் பாடிய 'கண்ணன் மனநிலையை  தங்கமே தங்கம் ...பாடல் போதுமான வெற்றி அடையவில்லை என்றே சொல்லலாம்.
இருப்பினும் எம்.எஸ்.வி.யால் அவ்வப்பொழுது  கிடைத்த ஒவ்வொரு வாய்ப்பையும் பயன் படுத்தி , ஆலயமனியில்,  'தூக்கம் உன் கண்களை தழுவட்டுமே..அமைதி உன் நெஞ்சில் நிலவட்டுமே....,     அவளுக்கென்று   ஒரு மனம்  படத்தில்,   'உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் ...என்றெல்லாம் பாடி அழியாத தடம் பதித்து வந்தார்.  இளையராஜா அன்னக்கிளியுடன் வந்தாரோ இல்லையோ இவரது  மறுமலர்ச்சி காலம்  பொற்காலம் என்றே சொல்லலாம்.
அன்னக்கிளி உன்னைத் தேடுதே .... என்று துவங்கி இன்றுவரை பெரிய  சூறாவழிப் பயணம் கொண்டார் என்றால் மிகையாகாது. பக்தி பாடலிலும் 'திங்கள் முடி சூடும் ஈசன் திருப்பாதமே.....,வல்லமை உள்ளமே நீதானையா....போன்ற பாடல்கள் நெஞ்சை விட்டு அகலாதவை.




கோதைதனபாலன்   


http://www.youtube.com/watch?v=CdHwIplFtik&feature=fvst






  

Thursday, February 23, 2012

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி: அன்று தமிழ் திரை பாடல் உலகில் M.L. வசந்தகுமாரி அவர்கள் குறிப்பிட்ட பாடல்களே கேட்டுக்கொண்ட பிறகே பாடுவார். மற்றபடி கர்நாடக சங்கீதத்தைய...

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி

அனுபவ முத்திரைகள்: M.L.வசந்தகுமாரி: அன்று தமிழ் திரை பாடல் உலகில் M.L. வசந்தகுமாரி அவர்கள் குறிப்பிட்ட பாடல்களே கேட்டுக்கொண்ட பிறகே பாடுவார். மற்றபடி கர்நாடக சங்கீதத்தைய...

M.L.வசந்தகுமாரி

அன்று தமிழ் திரை பாடல் உலகில்    M.L.வசந்தகுமாரி அவர்கள்  
குறிப்பிட்ட பாடல்களே கேட்டுக்கொண்ட பிறகே பாடுவார். மற்றபடி கர்நாடக சங்கீதத்தையே அரவணைப்பார்.
அப்படி குறித்த பாடல் அனைத்துமே அவராலேயே சிறப்படைந்தது என்றல் மிகையாகாது.
'செந்தமிழா எழுந்து வாராயோ..' மதுரை வீரன் படத்தில், 'அந்தி மயங்குதடி ஆசை பெருகுதடி...பார்த்திபன் கனவு படத்தில்,
'ஆடும் அருள் ஜோதி ..
என்று மீண்ட சொர்க்கத்தில் கம்பீரமான குரலில்
பிசிறில்லாமல் துவங்கி நடை பயின்று, இறுதியில் கம்பீரக் குரலோன் சீர்காழி பாட்டில் இணையுமிடம் அற்புதமானது.
எல்லோர் நெஞ்சிலும் அகலா இடம் பெற்றது. 'ஆடாத மனமுமுண்டோ,நடை அலங்காரமும் அழகு சிங்காரமும் கண்டு...
என்று மன்னாதிமன்னனில் டி .எம்.எஸ். டன் பாடிய பாடலும் ஒரு நிகரற்ற பாடலாகும். பின்னர் திருப்பாவை முப்பதும் இவர் பாடி
வெளிவந்த இசைத்தட்டு அந்த அதிகாலை நேரத்தில் கோயிலில் ஒலிக்கக் கேட்கும் போது தெய்வ சிந்தை எங்கும் குடி கொண்டிருப்பதை அறியலாம். .

http://www.youtube.com/watch?v=1QtGTf_7Qv0

MEENDA SORGAM --- AADUUM ARUL JOTHY --- PADMINI ----M L VASANTHAKUMARI ---
www.youtube.com

Thursday, February 16, 2012

அனுபவ முத்திரைகள்: சுசிலாவின் குரல் மேன்மை

அனுபவ முத்திரைகள்: சுசிலாவின் குரல் மேன்மை: சுசிலாவின் குரல் மேன்மைபற்றி சொல்லும் போது எம்.எஸ்.வியிடம்அவர் பெற்ற பயிற்சிகளை குறிப்பிடாமல் இருக்க முடியாது. மிசியம்மாவில் 'அறியாப்...

சுசிலாவின் குரல் மேன்மை

சுசிலாவின் குரல் மேன்மைபற்றி   சொல்லும் போது எம்.எஸ்.வியிடம்அவர் பெற்ற பயிற்சிகளை குறிப்பிடாமல்   இருக்க முடியாது.  மிசியம்மாவில்   'அறியாப் பருவமடா..என்ற பாடல் அடுத்து வந்த பாடல்களை    கவனித்தால் இது நமக்கு புரியும். ஆரம்ப காலத்தில் தெலுங்கில் எழுதி பாடி வந்தவர்.பின்னர்   எம்.எஸ்.வியிடம்அவர்   பெற்ற பயிற்சியின் விளைவு நல்ல உச்சரிப்புடனும்,பாவங்களுடனும் பாடிவந்த  உன்னத பாடகியானார். அவர். தமிழில்  சிர்காழியுடன்  ஆரம்பத்தில் அவர் பாடிய  பாடல்கள்  இன்றும்  அமுதகானங்களாகவே   உள்ளன.  வீரக்கனல் படத்தில் ,'தங்கக்கிளியே மொழி பேசு.....,' சித்திரமே    சித்திரமே   சிரிக்கக்கூடாதா.. ,'    ஒ வண்டுனாடாத சோலையில் அமர்ந்து வாடாமல் இருக்கும் பூ என்ன பூ...,  சிரிக்கின்றாள் இன்று சிரிக்கின்றாள் ..'  நல்லவன் வாழ்வான் படத்தில் காதல் பாடல்களாக நெஞ்சில் நிறைந்தவை. சிர்காழி உச்சரிப்புக்கு இவர் உச்சரிப்பும் பிசிறில்லாமல் வரும்.   டி.ஆர்.மகாலிங்கத்துடன் பாடும்போதும் இவர் குரல் சளைக்காமல்  ஈடுகொடுத்து  மணிபிரலாவகமாக  துள்ளி வரும். மாலையிட்ட மங்கையில் ,'ஆடை  கட்டி வந்த நிலவோ ...என்று அவர் பாடி வைக்க ...இவர் குரல் '...துள்ளி துள்ளி ஆடும் இன்ப லோக மங்கை.....என்று பாடி வரும் இனிமையே அலாதிதான்.  சி. எஸ் ஜெயராமனுடன்...பாவை விளக்கில் பாடிய 'காவியமா    நெஞ்சின் ஓவியமா...., புதையலில் ,'விண்ணோடும் முகிலோடும் விளையாடும் வெண்ணிலவே
...யாரால் மறக்கமுடியும்.   டி .எம். எஸ் உடன் பாடியது அதிகம் என்றாலும், இவர்களுடன் பாடும்போது அவர் குரல் இன்னும் சற்று மென்மையாகவே ஒலித்து அந்தப் பாடல்களுக்கு அடிமையாகி விடுகிறது என்றால் மிகையாகாது..



கோதைதனபாலன்.

 
http://www.youtube.com/watch?v=ZH0R37fyyYU


Saturday, February 11, 2012

What else gentle people do s... - All types of Poetry

What else gentle people do s... - All types of Poetry

சுசீலாவின் தேன்மதுரக் குரலில்...


சுசீலா பிரபலமாக இருந்த சமயங்களில் சொல்லி வைத்தாற்போல் சில பாடல்கள் பதிவாகி பிரபலமாயின. இங்கு கதானாயகி தன் தோழியருடன் அல்லது தனியாக தன் ஆர்வ உணர்வுகளை வெளிப்படுத்துமுகமாக வந்த பாடல்கள் பல பிரபலம். தாயைக்காத்த தனயன் படத்தில் கே.வி. எம்.இசையில,  ‘காட்டு ராணி கோட்டையிலே கதவுகள் இல்லை... தொடக்கம் நிறைய வெளியாயின. பணத்தோட்டத்தில் ,அழகான வாழை மரத்தோட்டம்.., ‘ மானாட்டம் தங்க மயிலாட்டம்...என்று ஆலய மணியில், ‘பறவைகளே, பறவைகளே எங்கே வந்தீங்க....தர்மம் தலை காக்கும் படத்திலும், ’ காடு கொடுத்த கனியிருக்கு,கழனி கொடுத்த நெல்லிருக்கு...என நீதிக்குப் பின் பாசத்தில் பாடி வந்தவர்...சர்வர் சுந்தரத்தில் ‘சிலை எடுத்தான் ஒரு சின்னப் பெண்ணுக்கு..’ இருவல்லவர்கள் படத்தில் ,’காவிரிக்கரையின் தோட்டத்திலே காணம் வந்தது தோழியரே...என்று பாடி அசத்தினார். இருளும் ஒளியும் படத்தில் வானிலே, மண்ணிலே ..எல்லாம் நீதானம்மா...என்று இயற்கையை ரசித்து பாடும் அழகு தனிதான். சாந்தி நிலயத்தில் , ‘இறைவன் வருவான் அவன் என்றும் நல்வழி தருவான் ....’  என்று சொல்லி,பாடி மனதில் கல்வெட்டாக விழும் வகையில் தன் முத்திரையை பதித்தவர்.

http://www.youtube.com/watch?v=7DGjeBs9F8s
இதில் கதை சொல்லி வரும் பாங்கே தனி..              கோதைதனபாலன்





Thursday, February 2, 2012

Open Window: NAAN MANIK KADIKAI

Open Window: NAAN MANIK KADIKAI: Get afraid, to what have to got afraid. Render helps to others and not for incomplete. Do favour the justice that comes from true heart. ...

அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை

அனுபவ முத்திரைகள்: அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை: அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை : பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழில் வடமொழி தாக்கம் அதிகம் பயின்ற நடையில் ஒரு தளர் நடை போட்...

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை: பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில் தமிழில் வடமொழி தாக்கம் அதிகம் பயின்ற நடையில் ஒரு தளர் நடை போட்டுக் கொண்டே தமிழ் வளர்ந்து வந்ததென்றால் அதற்கு பழையதும் ,புதியதுமான சைவத் திருமறைகளே காரணம் எனலாம். உ.வே.சாமிநாதர் அளித்த நற்பயன் என்றும் சொல்லலாம...்.மெல்ல இருபதுகளில் கால் பதிக்கும்போது, திரு.வி.க.,பாரதியார் போன்றோர் விடுதலை,பாராளுமன்றம்,மாநிலம் என்று தமிழ் சொற்களை அழகுற வெளிக் கொணர்ந்தனர்.அது சமயம் வெள்ளைத் துரைகளால் திரைப்படம் இயக்கப்பட்ட சூழ் நிலையில் வடமொழி தாக்கத்தில் இருந்து முதல் முறையாக தனித் தமிழில் பராசக்தி வெளிவந்து அது பெற்ற வரவேற்பு சொல்லி மாளாது. அடுத்து என்ன ? பழைய இலக்கிய பாடல்களும்,புது தமிழ் பாடல்களும் திரைவானில் இன்றளவும் வலம் வருகின்றன. இந்த வரிசையில், அந்தமான் காதலியில்..’காணி நிலம் வேண்டும்..’ ,பாவை விளக்கில்.. ..’மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்,அன்றலர்ந்த செண்பகப்பூ...’ என்று வரும் குற்றால குறவஞ்சி பாடல், அரங்கேறின. சைவத்திருமறையாய்,....’பொறுமையுடன் நினது திருமலரடி ...’ கொஞ்சும் சலங்கையில், ’மாசில் வீணையும் மாலை மதியமும்..’ பாதை தெரியுது பார் திரையில் மெதுவாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தன. கீதை கண்ணனை கண்ணதாசன் ஒருவரே பலவிதமாக பரிமளிக்கச் செய்தார். பூம்புகாரில்..’மாசறு பொண்ணே,வலம்புரி முத்தே..’ என்று கலைஞர் சிலப்பதிகாரத்தை அப்படியே உள் நுழைத்தார்.பழைய வேற்று மொழி டப்பிங் படத்தில் அந்தந்த பாடல் அப்படியே கொள்ளப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் வரிசையாக வேதா இசையில் கண்ணதாசன் ..’பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு..’ என்றும்,’ ‘கட்டோடு குழலாட ஆட..’ என்று பெரிய இடத்துப் பெண்ணில் , சங்கஇலக்கிய பாடல் கையாண்டிருப்பார். பட்டினத்தார் பாடலையும் ..’சட்டி சுட்டதடா கை விட்டதடா ’என்று விட்டு வைக்கவில்லை.எம்.ஜி.ஆர். தன் பங்கிற்கு கலங்கரை விளக்கத்தில் ...’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...’ என்று பறைசாற்றி வைத்தார்.....இனியும் புது கவிஞர்கள் தரமிரங்காது தமிழை வளர்த்து வருதல் வேண்டும்,னம் ரசனையும் அது போன்றிருத்தல் வேண்டும். என்னக் கவர்ந்த ஒரு வைரமுத்துவின் பாடல்... http://www.youtube.com/watch?v=akc4Id6KDcY