Search This Blog

Tuesday, January 31, 2012

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

 Nagesh at his old age.  
இன்று, நம் தமிழ் திரை படத்துறையில் நகைச்சுவையில் செங்கோலோச்சிய நாகேஷ் நினைவு தினம்.அவர்தம் இனிய நினைவுகளின் வெளிப்பாடு எழுதச் சுகமானது. ஸ்ரீதர் அவர்களால் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டவர். தனது நடிப்பை முழுக்க சார்ளிசாப்ளின், லாஇரல் ஹார்டியை தழுவி தமிழுக்கேற்ற புதிய பரிமாணத்தில் மெருகேற்றி கொடுத்தவர். காதலிக்க நேரமில்லை படத்தில்.. மலரென்ற முகமொன்று.. பாட்டில் இவர் நடனம் ரசிக்கத்தக்கது... செல்லப்பா என்று அறிமுகம் செய்து கொண்டு. பாலையாவிடம் கதை சொல்லும் நேர்த்தி மறக்க முடியுமா..? திருவிளையாடல் தருமி இன்றும் இந்த கம்ப்யூட்டர்...உலகில் பல பரிமானங்க்ளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுபவி ராஜா அனுபவியில் ,மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று சாடும் அழகே தனி. பாலசந்தரின் சர்வர் சுந்தரத்தில் ஒரு கதா நாயக அந்தஸ்தையும் திறம்பட செய்தவர். இவர் அழுதால் யாருக்கும் பிடிக்காது.. நீர்குமிழி படம் சான்று.
எம்.ஜி.ஆர்.க்கும் இவருக்கும் ஒத்து வராத நிலையிலும் தன் நிலையில் வென்று நின்றவர். எதிர் நீச்சல் போட்டவராயிற்றே..! நவக்கிரகம்,பாமா விஜயம் இன்னும் எல்லாம் இவருக்கு அனுக்கிரகமே. சமீபகால காலப் படங்களில் தந்தை வேடமேற்று நடித்தார். நடிப்பில்அழுவதைப் போல் வில்லத்தனத்தையும் இவரிடம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.. நகைச்சுவை நடிகனாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. இவர் நினைவுக்கு நகைச்சுவை நடிகை மனோரமாவுடன்..
http://www.youtube.com/watch?v=PdyX7rr9-68


கோதைதனபாலன்

நகைச்சுவை நடிகர் நாகேஷ்

இன்று, நம் தமிழ் திரை படத்துறையில் நகைச்சுவையில் செங்கோலோச்சிய நாகேஷ் நினைவு தினம்.அவர்தம் இனிய நினைவுகளின் வெளிப்பாடு எழுதச் சுகமானது. ஸ்ரீதர் அவர்களால் நெஞ்சில் ஓர் ஆலயத்தில் அறிமுகப்படுத்தப் பட்டவர். தனது நடிப்பை முழுக்க சார்ளிசாப்ளின், லாரல் ஹார்டியை தழுவி தமிழுக்கேற்ற புதிய பரிமாணத்தில் மெருகேற்றி கொடுத்தவர். காதலிக்க நேரமில்லை படத்தில்.. மலரென்ற முகமொன்று.. பாட்டில் இவர் நடனம் ரசிக்கத்தக்கது... செல்லப்பா என்று அறிமுகம் செய்து கொண்டு. பாலையாவிடம் கதை சொல்லும் நேர்த்தி மறக்க முடியுமா..? திருவிளையாடல் தருமி இன்றும் இந்த கம்ப்யூட்டர்...உலகில் பல பரிமானங்க்ளில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுபவி ராஜா அனுபவியில் ,மெட்ராஸ் நல்ல மெட்ராஸ் என்று சாடும் அழகே தனி. பாலசந்தரின் சர்வர் சுந்தரத்தில் ஒரு கதா நாயக அந்தஸ்தையும் திறம்பட செய்தவர். இவர் அழுதால் யாருக்கும் பிடிக்காது.. நீர்குமிழி படம் சான்று.
எம்.ஜி.ஆர்.க்கும் இவருக்கும் ஒத்து வராத நிலையிலும் தன் நிலையில் வென்று நின்றவர். எதிர் நீச்சல் போட்டவராயிற்றே..! நவக்கிரகம்,பாமா விஜயம் இன்னும் எல்லாம் இவருக்கு அனுக்கிரகமே. சமீபகால காலப் படங்களில் தந்தை வேடமேற்று நடித்தார். நடிப்பில்அழுவதைப் போல் வில்லத்தனத்தையும் இவரிடம் மக்கள் ஏற்றுக்கொள்ளவில்லை என்றே சொல்லவேண்டும்.. நகைச்சுவை நடிகனாகவே மக்கள் மனதில் வாழ்ந்து கொண்டிருக்கிறார் என்றால் மிகையாகாது. இவர் நினைவுக்கு நகைச்சுவை நடிகை மனோரமாவுடன்..
http://www.youtube.com/watch?v=PdyX7rr9-68












கோதைதனபாலன்

Saturday, January 28, 2012

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை

அனுபவ முத்திரைகள்: திரை இசையில் இலக்கிய பார்வை: அந்தமான் காதலியில்..’காணி நிலம் வேண்டும்..’ ,பாவை விளக்கில்.. ..’மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்,அன்றலர்ந்த செண்பகப்பூ...’ என...

திரை இசையில் இலக்கிய பார்வை


அந்தமான் காதலியில்..’காணி நிலம் வேண்டும்..’ ,பாவை விளக்கில்.. ..’மந்தியெல்லாம் மாங்கனியை பந்தாடி பல்லிளிக்கும்,அன்றலர்ந்த செண்பகப்பூ...’ என்று வரும் குற்றால குறவஞ்சி பாடல், அரங்கேறின. சைவத்திருமறையாய்,....’பொறுமையுடன் நினது திருமலரடி ...’ கொஞ்சும் சலங்கையில், ’மாசில் வீணையும் மாலை மதியமும்..’ பாதை தெரியுது பார் திரையில் மெதுவாக எல்லோர் மனதிலும் இடம் பிடித்தன. கீதை கண்ணனை கண்ணதாசன் ஒருவரே பலவிதமாக பரிமளிக்கச் செய்தார். பூம்புகாரில்..’மாசறு பொண்ணே,வலம்புரி முத்தே..’ என்று கலைஞர் சிலப்பதிகாரத்தை அப்படியே உள் நுழைத்தார்.பழைய வேற்று மொழி டப்பிங் படத்தில் அந்தந்த பாடல் அப்படியே கொள்ளப்பட்டன. மாடர்ன் தியேட்டர்ஸ் படம் வரிசையாக வேதா இசையில் கண்ணதாசன் ..’பொன்வண்டொன்று மலரென்று முகத்தோடு..’ என்றும்,’ ‘கட்டோடு குழலாட ஆட..’ என்று பெரிய இடத்துப் பெண்ணில் , சங்கஇலக்கிய பாடல் கையாண்டிருப்பார். பட்டினத்தார் பாடலையும் ..’சட்டி சுட்டதடா கை விட்டதடா ’என்று விட்டு வைக்கவில்லை.எம்.ஜி.ஆர். தன் பங்கிற்கு கலங்கரை விளக்கத்தில் ...’எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு...’ என்று பறைசாற்றி வைத்தார்.....இனியும் புது கவிஞர்கள் தரமிறங்காது தமிழை வளர்த்து வருதல் வேண்டும், நம் ரசனையும் அது போன்றிருத்தல் வேண்டும். என்னக் கவர்ந்த ஒரு வைரமுத்துவின் பாடல்... http://www.youtube.com/watch?v=akc4Id6KDcY

மொட்டு ஒன்று மலர்ந்திட மறுக்கும்...     
கோதைதனபாலன்




 ·  · 

Wednesday, January 25, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்

அனுபவ முத்திரைகள்: கண்ணணோடு கண்ணதாசன்: கண்ணதாசனுக்கு கண்ணன் மீது கடைசி வரை பிரேமையே . கோபியர் கண்ணனை வெகுவாக ரசிப்பார். வானம் பாடியில்'கங்கைக் கரை தோட்டம்.கன்னிப் பெண்கள் கூட்ட...

கண்ணணோடு கண்ணதாசன்

  கண்ணதாசனுக்கு கண்ணன் மீது கடைசி வரை பிரேமையே . கோபியர் கண்ணனை வெகுவாக ரசிப்பார்.

பாடியில்'கங்கைக் கரை தோட்டம்.கன்னிப் பெண்கள் கூட்டம் கண்ணன்

நடுவினிலே......' ..பாடலை பாரதியார் எழுதியது என்று மாற்றி

நினைத்தவரும் உண்டு. 'காவிரிகரையின் ஓ
ரத்திலே கானம்


வந்தது,கானம் வந்த வழியினிலே கண்ணன் வந்தான் தோழியரே..''

என்று ஜஸ்டிசு விசுவநாதனில்  சொல்லியிருப்பார்.

 

  'ராதைக்கேற்ற கண்ணனோ , சீதைக்கேற்ற ராமனோ ,

கோதைக்கேற்ற  கோவலன் யாரோ..' என்று 'சுமைதாங்கியில் 

 கூறி வைப்பார் . பின் பச்சை விளக்கில்  மணப்பெண்ணின் நாணத்தை

விளக்குகையில் ...'ஒன்று சொல்ல நினைத்தால் அந்த பொல்லாத

கண்ணனின் ராதை, நெஞ்சில் நாணம் கொண்டாள் கண்ணை மூடிக்

கொண்டாள் அந்த புல்லாங் குழல் மொழிக் கோதை .. ' என்று

இருவரையுமே கண்ணனோடு இணைத்து பாடியவர்..'மல்லிகை

முல்லை... என்று துவங்கும் சிவாஜி பாடலில் ...' கோதை ஆண்டாள்

தமிழை ஆண்டாள் என்று கண்ணனின் தெய்வத் தன்மையோடு பாடி

விடுவார். நானும் ஒரு பெண் திரையில்..'கண்ணா கருமை நிறக்

கண்ணா ..என்றழைத்து கருமை நிறக் குறையினால் படும் பாட்டிற்கு

விளக்கம் கேட்பார். 'கண்ணன் வருவான் கதை சொல்லுவான்.... குழல்

எடுப்பான் பாட்டிசைப்பான் ,வலம்புரி சங்கெடுத்து

பாலுட்டுவான் ...'பாட்டில் வரும் அழகுற கற்பனையை என்ன

சொல்ல ,! பஞ்சவர்ணகிளியில் ! மனதில் இந்த சந்தோஷங்கள்

அனுபவித்து கீதை கண்ணனையும் பாடுவார். ..தர்மம் என்னும்

தேரிலேறி கண்ணன் வந்தான் , தாளாத துயர் தீர்க்க கண்ணன்

வந்தான் ..என்று ராமுவில் சொல்லி , கர்ணனில் .'... மன்னித்து

அருள்வாயடா.. என்று இறங்கி 'வஞ்சகன் கண்ணனடா நானும் உன்

பழி கொண்டேனடா ...' என்ற இயலாமையை தன மனம் வருந்தவும்,

யாரும் போற்றும்படியாகவும் இவரால்தான் அத்தகைய வரிகளை

புனைய முடிந்தது. தெய்வமகனில் ,'கேட்டதும் கொடுப்பவனே

கிருஷ்ணா.. என்று உருகிவிட்டு ,' கௌ ரவம் படத்தில் 'நீயும் நானுமா

கண்ணா என்று ஆரம் பித்து .. நாளைய பாரதம் யாரதன்

காரணம் ..என்று அதட்டி கேட்கும் பாங்கு இவரிடத்தில் மட்டுமே.ஆக

’கண்ணனை நினைக்காத நாளிலையே ‘ ..என்பவரும் இவரே...



http://www.youtube.com/watch?v=svefvX9hPm8



கோதைதனபாலன்


 கண்ணன் வருவான்.. வாலி எழுதியது.

Saturday, January 21, 2012

அனுபவ முத்திரைகள்: கண்ணதாசனின் கவிதை நடை

அனுபவ முத்திரைகள்: கண்ணதாசனின் கவிதை நடை: கண்ணதாசன் பாடல்களில் குறிப்பிடத்தக்க தனித்துவங்கள் நிறைந்தே காணப்படும். அதில் சொல் சுவை , பொருள் சுவையுடன் தனி நடை அழகு நயமுடன் பின்னப்பட்டி...

கண்ணதாசனின் கவிதை நடை

கண்ணதாசன் பாடல்களில் குறிப்பிடத்தக்க தனித்துவங்கள் நிறைந்தே காணப்படும். அதில் சொல் சுவை , பொருள் சுவையுடன் தனி நடை அழகு நயமுடன் பின்னப்பட்டிருக்கும். ரசிக்கப்படும் ரசனை கேள்வியும் பதிலுமான பாடல்களிலும் சற்று அதிகமாகவே காணப்படும். இருவர் உள்ளம் படத்தில் 'நதி எங்கே போகிறது ..கடலைத்தேடி.
நாள் எங்கே போகிறது ..பொழுதை த்தேடி.
நிலவெங்கே போகிறது .. மலரைதேடி
நினைவெங்கே போகிறது .. உறவை தேடி .. என்று முடிப்பார்... அடுத்து . சொல்லியாயிற்று , அடுத்துஎன்ன என்பது போல் ,
அழகு சிரிக்கிறது ...ஆசை துடிக்கிறது
பழக நினைக்கிறது ....பக்கம் வருகின்றது ... என்று சொல்லி வருவார். இதுவா அதுவா என்ற கேள்விக்கு அந்த கேள்வி ஒத்த வரிகளையே பதிலாகவும் காண்பிக்கும் ஜாலம் அவரிடம் உண்டு.
கொடி அசைந்ததும் காற்று வந்ததா
காற்று வந்ததும் கொடி அசைந்ததா....[கேள்வி]
நிலவு வந்ததும் மலர் மலர்ந்ததா
மலர் மலர்ந்ததும் நிலவு வந்ததா ..[பதில்] .. பார்த்தால் பசிதீரும் .........இப்படியே பாடல் போவது ஒரு சுவைதானே. பிறகு இன்னும், சொல்லும் உண்மையை எதிர்மறை பொருள் கொண்டே உணர்த்துவது போல் பாடல் வடிப்பது கைவந்த கலை.
பனியில்லாத மார்கழியா
படையில்லாத மன்னவரா
இனிப்பில்லாத முக்கனியா
இசையில்லாத முத்தமிழா ...... ஆனந்த ஜோதியில். மற்றும் முரண்பாடான பொருளையும் தெளிவாக வைப்பார்.
நினைக்க தெரிந்தா மனமே
உனக்கு மறக்கத்தெரியாதா
பழகத் தெரிந்த உயிரே
உனக்கு விலகத்தெரியாதா ... ஆனந்த ஜோதியில். இரட்டை அர்த்தம் சிலேடை நயம் அவர் பாடலில் காணலாம். 'அத்திக்காய் காய்
ஆலங்காய் வெண்ணிலவே ,இத்திக்காய் காயாதே என்னைப்போல் பெண்ணல்லவோ.' .....பலேபாண்டியாவில் இது அவரின் இலக்கிய ரசனைக்கும் பொருந்தும். தத்துவம் தலை தூக்கி நிற்கும் அவரிடம்.

...வாழ்க்கை என்பது வியாபாரம்
ஜனனம் என்பது வரவாகும்
மரணம் என்பது செலவாகும்
போனால் போகட்டும் போடா.. பாலும்பழத்தில். அவள் ஒரு தொடர்கதையில், 'கள்ளிக்கேது முள்ளில் வேலி ..போடி தங்கச்சி , காட்டுக்கேது தோட்டக்காரன் இதுதான் என் கட்சி ... தன் நிலைப்பாட்டை அழகுபட உரைப்பார். அபூர்வராகங்களில் .....'அதிசய ராகம் ஆனந்த ராகம் ..', ' கேள்வியின் நாயகனே ...'எழுத, பாலசந்தர் அந்த கதைக்கு இவர் ஒருத்தராலே இப்படி ஒரு அருமையான பாடல் வடிக்க முடிந்தது என்று புளகாங்கிதம் அடைந்தது யாவரும் அறிந்ததே.
http://www.facebook.com/l.php?u=http%3A%2F%2Fwww.youtube.com%2Fwatch%3Fv%3DH5nFSVMxK20&h=XAQFmLJ42
 



கோதைதனபாலன்