அனுபவ முத்திரைகள்.. தமிழ்த் திரையில்
Search This Blog
Thursday, July 22, 2021
Saturday, September 19, 2020
#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் சில
பொழுது போக்க சில படங்கள் என்று சொன்னால் அந்த கட்டமைப்பில் வெளியான பல திரைப்படங்களில் நான் மிகவும் ரசித்த சிலவற்றில் அதிகமாக மனதில் இனியதொரு தாக்கம் தந்த வரிசையில் முன்னிருப்பது ,
#அன்றுமனதைப்பாதித்த சில திரைப்படங்கள் .
அவள் ஒரு தொடர்கதை ..
நன்கு திரைக் கதைகளை அலசிப் பார்க்கும் ஒரு பக்குவம் என்னுள் வளர்ந்திருந்ததை சில படங்களால் தெளிவுற அறிந்துகொண்டேன் . அதுவரை பொழுதுபோக்க திரைக்கதைகள் , பாடல்கள் என்றே இருந்த எனக்கு , சமூகச் சாடலில் ஒரு அங்கமாக , கே. பாலச்சந்தர் அவர்கள் இயக்கத்தில் வெளிவந்த அவள் ஒரு தொடர்கதை திரைப்படம் ..பெண்மையின் மேன்மையை உரசிப் பார்க்கும் ஒரு புதிய வெளிச்சத்தை பார்க்கும் மக்களிடம் உருவாக்கியது . ஒவ்வொரு வசனமும் மனதில் ஈட்டி பாய்ந்ததுபோல் இருந்தது . வீட்டிற்கு வந்து பல நாட்களாக என் மனம் இது பெண்மைக்கே வந்த சாபமோ என்று தோன்றியது . காரணம் அதை நடைமுறை வாழ்க்கையில் நானறிந்த பெண் மருத்துவர்கள் வாழ்வில் கண்டுள்ளேன் . எவ்வளவு உண்மை
தலைமகள் சுஜாதா தனது சம்பாத்தியத்தில் அன்னான் தங்கைகள் , தாய் தந்தையரை பராமரிக்கிறார். பொறுப்பற்ற அன்னான் குடிகாரன் . மனம் அதிர்ந்து போனேன் ..எவ்வளவு பெரிய உண்மையை துணிந்து சொல்லியும் பலனில்லை . காதலித்தவனையும் கைபிடிக்காது தங்கைக்கு திருமணம் செய்து வைக்கிறாள் . தனக்கென்று ஒரு மாப்பிள்ளை வர இன்னொரு தங்கைக்கு முடித்து வைத்து , அண்ணனை பறிகொடுத்து , திருமணமான இன்னொரு தங்கை விதவைக்கு கோலம் ...திரும்பவும் இவள் வேலை , கடமையாக தொடர்கிறது .
பொறுப்பற்ற பத்தாம் பசலித்தனமான பெற்றோரை நன்கு அடையாளம் காட்டியது . கவியரசரின் பாடல் ..தெய்வம் தந்த வீடு ... ஒவ்வொரு வரியும் இன்றைக்கும் நான் வியந்து ரசிப்பேன் .. " ... என்னைத் தோண்டி ஞானம் கண்டேன் இதுதான் என் கட்சி ....."
உதிரிப் பூக்கள் .
இயக்குனர் மகேந்திரன் அவர்கள் கைவண்ணம் . பொருத்தமான நடிகை அஸ்வினி . நல்ல பாங்கான தோற்றம் . அமைதியான பெண் . புரிந்து கொள்ளாத கணவன் . இல்வாழ்க்கை அர்த்தமே புரியாத கணவன் . அன்பிற்கு ஏங்கும் மனம் , குழந்தைகள் மீதே அதீத பாசம் .... ஆக மகிழ்ச்சி என்ற சொல்லுக்கே அர்த்தமில்லாத கொடுமையான வாழ்க்கை . முகபாவத்திலேயே படம் முழுக்க நம்மை கவர்ந்திடுவார் . அடிப்படையில் பெண் மனது பற்றி அறியாமலே தந்தை முடிவெடுத்து திருமணம் நடத்தி வைத்ததால் வேனும் யதார்த்த கெடுதலான விளைவுகள் ...ஊரறிய மெதுவாக அரங்கேறும் . இறுதியில் பஞ்சாயத்தார் கணவனான விஜயனையே ...தனக்கே தண்டனையைத் தெரிந்தெடுக்க , திருந்தாத ஆணாதிக்க மனா நிலையில் நீரில் விழுந்து உயிரை மாய்த்துக் கொள்கிறார் . நம் மனதில் ஒரு கேள்வி ... வாழும் பெண் இப்படி விரும்பமாட்டாள் .... ஆனால் சமூகத்தில் சில விதிகள் இவ்வாறு விதிக்கப் படுகிறது .
'' >> அழகிய கண்ணே ! உறவுகள் நீயே .....' இந்தப் பாடல் வானொலியில் ஒலிக்கும் போதெல்லாம் ... என் மனம் அழும் .
அழகி ...
எனது பிந்திய நாட்களில் நான் வியந்து ரசித்த ஒரு திரைப் படம் . மெலிதான இளம் பிராய காதல் வெகு இயல்பாக ... பார்த்திபன் காண்பித்திருப்பார் . பின்னால் ஏழைக் காதலன் வசதியு டையவனாகிறான் ... வேறொருத்தியை மணந்து வாழ்கிறான் .... சீமான் மகளோ இன்னொருவனை மணந்து ஏழ்மை நிலைகுத்தி தள்ளப் பட்ட நிலையில் ...குழந்தைகள் , வியாதி பீடித்த கணவன் இவர்களுடன் அபலையாக ..இவனை சந்திக்க .. அவளுக்கு இவன் நல்ல நிலைமை மகிழ்வைத் தருகிறது . அவனுக்கோ மனதில் ஒரு பூகம்பம் இவள் நிலை கண்டு . மெலிதான அரும்பிய நிலையிலேயே விலகிய காதலுணர்வுகள் மறுபடியும் மனங்களில் வலுவில்லாத நூலிழைகளாக தோன்ற அவர்களின் நல்வாழ்விற்கு இவன் கவனம் எடுத்து உதவுகிறான் . பார்த்திபன் நாயகனாக தேவயானி உண்மை அறிந்த மனைவியாக ..வங்க நடிகை நந்திதா ..? அமைதியான முகவெட்டு அற்புதமாக நடித்திருப்பார் .மாணவப் பருவத்தில் படித்தவர்களும் அருமை .
விளம்பரம் அதிகம் இல்லாமலே அதிக நாட்கள் ஓடியது . வேறொருவர் சொல்லி இதை பார்த்தேன் ...இப்படி ஒரு கதையை திரைப்படமாகி வெற்றியும் கண்டா
பார்த்திபனை எண்ணி வியந்தேன் .
"...... ஒளியிலே தெரிவது ...', " பாட்டுச் சொல்லி ....' பாடல்கள் இன்னும் ஒரு புதுமையான ரசனையில் என் மனம் ரசிக்கும் .
kothaidhanabalan
(செம்மொழியாள் ) .
#அன்றுமிகவும்ரசித்த திரைப்படங்கள் .
என்னையு மறியாமல் , ஏனென்றும் புரியாமல் பலமுறை பார்க்கவைத்த திரைப்படங்கள் மூன்று , திருவிளையாடல் , தில்லானா மோகனாம்பாள் , உலகம் சுற்றும் வாலிபன் ,
திருவிளையாடல் .. // ஐந்துமுறை அடுத்தடுத்து விரும்பிப் பார்த்தேன் . இன்றைக்கு எழுதச் சொன்னால் புராணங்களுக்கு நல்ல விளக்கம் , நல்ல நடிப்பு ,பாடல்கள் அருமை என்ற ரீதியில் சொல்லிச்செல்லலாம் . ஆனால் விமரிசிக்க இயலாத பருவத்தில் என் மனம் அதில் உள்வாங்கியது எதெதை என்று யோசித்து பார்க்கிறேன் .
வண்ணப் படம் ஆரம்பக் காட்சி மிகவும் அழகு . சம்போ மகா தேவா ...நந்தி , பூத கணங்களுடன். பாடல் காட்சி மனதைத்தொட்டது .என்னைக் கவர்ந்த ஒன்று .
கே. பி. சுந்தராம்பாள் ...காட்சிகள் முதன்மையாக எனது இதயத்தை தொட்டன . கனி சம்பந்த வசனங்களும் , பழம் நீயப்பா ... பாடல்களும் ...நான் தலையசைத்து ரசித்தேன் . ' ஆறுவது சினம் , கூறுவது தமிழ் ..." வரிகளில் ஒரு ஆளுமையை காட்சிக்கேற்ப அழகுற அமைந்தது கண்டு ரசித்தேன் . நக்கீரன் , தருமி வசனம் , சிவ பெருமான் தருமி ..காட்சிகள் இன்றைக்கும் தனி சிறப்பு . எ.பி. நாகராஜன் நக்கீரன் நடிப்பில் ஒரு அமைதியான கம்பீரம் கண்டேன் . இறுதியில் சிவாஜி ..பாலையா ...காட்சி என்னை மிகவும் ரசிக்க வைத்த ஒன்று .
பாட்டும் நானே ...பாவமும் நானே ... பாடல் அனைத்திற்கும் முத்தாய்ப்பு ஆனது . அத்தனை பாடல்களும் அருமை கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் . டி.எம்.எஸ். , சுசீலாம்மா , ஜானகியம்மா , சீர்காழி கோவிந்தராஜன் , டி ஆர். மகாலிங்கம் , பாலமுரளி கிருஷ்ணா , பி.பி. ஸ்ரீனிவாஸ் ...அத்தனைபேரும் கே பி எஸ் பாடல்களுடான் பவனி வந்தது ...ஒரு அருமையான உணர்வைத் தந்தது என்றும் சொல்லலாம் .
ஒரு சின்ன நெருடல் இந்தப் படத்தில் எனக்கு உண்டு . ஓஎகே தேவர் ...சாவித்திரி , சிவாஜி சம்பந்தப் பட்ட காட்சி . யாகத்திற்கு அழைப்பில்லை .. என்ற பிரச்னை . அதில்
.கணவன் பேச்சை மீறி தகப்பன் வீடு சென்றதால் பார்வதிக்கு கிடைத்த தண்டனை ... என்று முடிவெடுத்து பேசும் வசனம் ...இன்றைக்கும் சரியானது அல்ல என்றே எண்ணத் தோன்றுகிறது . ஆணாதிக்க சிந்தனை அவ்வளவே . மற்றபடி சிவாஜியின் திருவிளையாடல் ..திரைத்துறையில் முதன்மையாக என்னை பாதித்த படம் .
தில்லானா மோகனாம்பாள் ...// சமூகக் கதை . கலைகளின் வழி ...தமிழருக்கே உரிய நாதஸ்வரம் , பரத நாட்டியம் ..கலைஞர்களிடம் மெலிதாக இழையோடிய காதல் கதை . பத்மினி அவர்களின் நாட்டியம் , சுசீலாம்மாவின் பாடல்கள் என்னை திரும்பவும் பார்க்க .வைத்தன இரண்டுமுறை விரும்பி சென்று பார்த்தேன் . சிவாஜி , பாலையா, பத்மினி ...ரயில் வண்டி காட்சிகள் , நம்பியார் மாளிகையில் நாயனா வாசிப்பு , நாகேஷின் நயமான வில்லத்தனம் ..தனி சிறப்பாக மனோரமா ..ஜில் ஜில் ராணி ...டப்பாங்குத்து ஆட்டம் ஆடுவேன் ....ஈஸ்வரி அம்மா குரலில் .. குரலில் பாடி ஆடி நடித்தது .. நல்ல ரசனை . புதுமையை நோக்கி நகர்ந்த காலத்தில் பழமையைப் பாராட்டி வெற்றி கண்டா படம் . கே.வி. மகாதேவன் அவர்கள் இசையில் .
உலகம் சுற்றும் வாலிபன் .. // மூன்று முறை அடுத்தடுத்து பார்த்தேன் . ஒரு உண்மை எனக்கு புரட்சி நடிகர் கதையில் ... எப்போதுமே எதையும் வென்றெடுக்கும் குணம் பரவலாக இருப்பதை ரசிப்பேன் . அது இந்தப் படத்தோடு முடிந்தது . இதன் பிறகு அவ்வளவாக நான் ரசிக்கவில்லை . அன்றைக்கு இந்திப் படங்களுக்கு மட்டுமே வ ண்ணப் படங்கள் , மற்றும் வெளிநாடுகளில் எடுக்கும் அனுமதி எளிதாக கிடைத்த வேளையில் , தமிழ் படங்களில் ஒரு தேக்க நிலை உருவாயிற்று . அது இசையிலும் பாதித்தது . இந்த சூழ்நிலையில் எம்.ஜி. ஆர். அவர்கள் நல்ல செலவில் பிரமாண்டமாக இந்தப் படத்தை தயாரித்தார் . இரண்டு வேடங்களில் அவருக் . கேற்ற கதையில் ஜனரஞ்சகமாக எடுத்திருந்தார் . ஜப்பானில் நடை பெற்ற உலக சந்தையை ..." உலகம் .. உலகம் .' பாடலில் அழகுற காண்பித்திருப்பார் .
தாய்லாந்து நடிகை ஒருவர் நடித்திருப்பார் . அவரது கொஞ்சும் தமிழ் என்னை வியக்கவைத்தது . வித்தியாசமான அவர் பங்களிப்பு மனம் கவர்ந்த ஒன்று . " பச்சைக்கிளி ...முத்துச்சரம் ..முல்லைக்கொடி யாரோ .." பாடலில் அந்த ஊர் இசையும் பயின்று வந்திருக்கும் . இவ்வளவு செலவிற்கும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைப்பில் அனைத்து பாடல்களும் அருமையாக அமைந்து பெரும் வெற்றியைத் தந்தன என்றால் அது மிகை இல்லை .
இதற்குமுன் இத்யாதி சங்கதிகளை இந்தப்பெற்று இந்திப் படங்களே முன்னணியில் நின்று மக்களைக் கவர்ந்த நிலையில் , வடஇந்திய பெரும் கலைஞர்களும் இதில் கையாண்ட தொழில் நுட்ப படப்பிடிப்புகளை பாராட்டி வியந்து சென்றனர் . இது எம் ஜி ஆர் தமிழ்த் திரைக்கு ஒரு விளம்பர அளவில் அளித்த பெரிய பங்களிப்பு என்றே சொல்லலாம் .
அன்றைய உணர்வுகள் அப்படியே இங்கே .
கோதை தனபாலன்
Saturday, September 15, 2018
ஒரு சொல் அல்லது தொடர் எடுத்தாளுமை நம் தமிழ்த் திரைப் படப் பாடல்களில் நிறைய உண்டு.சமீப காலங்களில் எடுத்தாளுமைபற்றி இங்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஆசை.
ரோஜா படம் எடுத்தால் சின்ன சின்ன ஆசை ஓடி வரும் வைரமுத்துவின் வரிகளில் , முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை.... அந்த அளவிற்கு நுணுக்கமாய் ஆசைகளை பகுத்தறிந்து சொல்லியிருப்பார்.
ஒற்றை நாணயம்
ஆனந்தம் படத்தில், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம் .. என்று அவ்வண்ணம் காணும் ரூபங்களை அடுக்கிச் செல்வார்
ஞாபகம் வருதே
ஒரு இளமைக் கால நினைவுகளை அடுக்கடுக்காய் ,நல்ல ரசனையோடு
ஞாபகம் வருதே ..என்று ஒரு நல்ல ஏக்கத்தின் பிரதி பலிப்பாய் கொண்டுசெல்வார். '.... ஞாபகம் வருதே முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு,
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு... பழகிய நீச்சல், 'பழகிய சைக்கிள் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்..... என்று வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாண்டி வந்த அனுபவங்கள் கோர்த்து சொல்லப் பட்டிருக்கும்
ஞாபகங்கள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் உள்ளபடியே ஞாபகங்கள் தாலாட்டிச் செல்லும் , ' ஏதோ ஒரு பாட்டு ..என்ற பாட்டில்
கேட்டேன்
அமர்க்களம் படத்தில் ...சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் ..பாட்டில் விரக்திகள் வாழ்வில் ஒருவனுக்கு எப்படியெல்லாம் வருமோ அவையெல்லாம் பட்டியல் போடப் பட்டிருக்கும். '........சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன், சின்ன வயதில் புத்தகம் கேட்டேன்......' இவை போராட்டக்காரனின் விரக்தியை என்ன நேர்த்தியாய் உரைக்கின்றன. http://www.youtube.com/watch?v=6cStcpd_pe4&feature=player_detailpage
ஒரு சொல் ஆளுமை
ஒரு சொல் அல்லது தொடர் எடுத்தாளுமை நம் தமிழ்த் திரைப் படப் பாடல்களில் நிறைய உண்டு.சமீப காலங்களில் எடுத்தாளுமைபற்றி இங்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஆசை.
ரோஜா படம் எடுத்தால் சின்ன சின்ன ஆசை ஓடி வரும் வைரமுத்துவின் வரிகளில் , முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை.... அந்த அளவிற்கு நுணுக்கமாய் ஆசைகளை பகுத்தறிந்து சொல்லியிருப்பார்.
ஒற்றை நாணயம்
ஆனந்தம் படத்தில், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம் .. என்று அவ்வண்ணம் காணும் ரூபங்களை அடுக்கிச் செல்வார்
ஞாபகம் வருதே
ஒரு இளமைக் கால நினைவுகளை அடுக்கடுக்காய் ,நல்ல ரசனையோடு
ஞாபகம் வருதே ..என்று ஒரு நல்ல ஏக்கத்தின் பிரதி பலிப்பாய் கொண்டுசெல்வார். '.... ஞாபகம் வருதே முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு,
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு... பழகிய நீச்சல், 'பழகிய சைக்கிள் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்..... என்று வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாண்டி வந்த அனுபவங்கள் கோர்த்து சொல்லப் பட்டிருக்கும்
ஞாபகங்கள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் உள்ளபடியே ஞாபகங்கள் தாலாட்டிச் செல்லும் , ' ஏதோ ஒரு பாட்டு ..என்ற பாட்டில்
கேட்டேன்
அமர்க்களம் படத்தில் ...சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் ..பாட்டில் விரக்திகள் வாழ்வில் ஒருவனுக்கு எப்படியெல்லாம் வருமோ அவையெல்லாம் பட்டியல் போடப் பட்டிருக்கும். '........சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன், சின்ன வயதில் புத்தகம் கேட்டேன்......' இவை போராட்டக்காரனின் விரக்தியை என்ன நேர்த்தியாய் உரைக்கின்றன.
http://www.youtube.com/watch?v=6cStcpd_pe4&feature=player_detailpage
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் .. ஞானத்தங்கமே!
அவர் ஏதும் அறியாதவரடி ஞானத்தங்கமே !
சிவன் இருக்கக் கூடிய இடங்களை விட்டு விட்டு... எங்கெங்கோ ஏன் தேடி அலைகிறார்கள்... ?
'உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தானுரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே..
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே !
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்.. ஞானத்தங்கமே!
ஞானத்தங்கமே !
நடத்துபவன் ... இனம் கண்டுகொள்.
கேலிக்கு ஆளாவான் .. கண்டு கொள்வாய்
அவனை ஞானத்தங்கமே..
தொட்டி லை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத்தங்கமே!
அவன்தான் தரணியைப் படைத்தாண்டி
ஞானத்தங்கமே!
இங்கு செட்டி நாட்டில் அன்று வேடிக்கையாகப் பேசும் பழக்கம் உண்டு.
சிவபெருமான் ஏமாந்து வரங்களை அள்ளித் தரவேண்டியது... பெருமாள் அவதாரம் எடுத்து காப்பாற்ற வேண்டியது.
தரணியைப் படைத்த கடவுள் அவனே...சிவனாகி நின்றவன்..வேடிக்கையாக
பிள்ளையைக் கிள்ளி விட்டு .. வீழ்ந்துபட விடாமல் .. காத்து நிற்கும் குணத்திலே..கடவுள் பாதி...















