Search This Blog

Saturday, September 15, 2018

 
கவியரசர் கண்ணதாசன் பாடல்கள் ரசனைகள் 43
ஒரு ஆன்மீக ரசனையில் கண்ணதாசன் பாடல்... அன்றிலிருந்து இன்று வரை பொருள் நயத்தின் சுவை எவ்வளவு எளிமையான பதங்களில் ..சீர்காழியார் குரலில் அச்சரமாக , திருவருட் செல்வரில் .. இன்னிசைத் திலகம் இன்னிசையில் ஒலித்து வருகிறது..! பாடல் கேட்கிறது என்றால் முழுமையாகக் கேட்ட பிறகே அவ்விடத்தை விட்டு அகலச் சொல்லும்.
தன்னையே நினைந்து தரிசிக்க விரும்பும் அடியாருக்கு. .. காட்சி தரும் பொருட்டு சிவன் கிளம்பி வருகிறார். அவ்வாறு வருகையில் மகிழ்ச்சியின் ஒரு அம்சமாக தன்னையே ...தாழ்த்திக் கொண்டு.. அதாவது உண்மையை வேடிக்கையாகச் சற்று திரித்துச் சொல்லி... தன்னைப் பார்க்க வேண்டும் என்று துடிக்கிறாரே...
என்ற வண்ணம் இப்பாடல் புனையப்பட்டுள்ளது.
' இருக்கும் இடத்தை விட்டு
இல்லாத இடம் தேடி
எங்கெங்கோ அலைகிறார் .. ஞானத்தங்கமே!
அவர் ஏதும் அறியாதவரடி ஞானத்தங்கமே !
ஞானத்தங்கம்.. என்பதே பிரியமாக சித்தர்கள் அடியார்கள் தங்கள் பாடல்களில் ..ஒருவரை அழைத்துக் கொள்ளும் முறை. அப்படி இங்கே சிவனே ..அப்பரை விளிக்கிறார்.. சொல்கிறார்....
சிவன் இருக்கக் கூடிய இடங்களை விட்டு விட்டு... எங்கெங்கோ ஏன் தேடி அலைகிறார்கள்... ?
இனி தான் வஞ்சப்புகழ்ச்சியில் இறங்குகிறார்.. விந்தை. அழகு நடை ..பொருள் சூட்சுமம் ரசித்து ..மனம் வியந்து நிற்போம்.
'உன்னையே நினைத்திருப்பான்
உண்மையைத் தானுரைப்பான்
ஊருக்குப் பகையாவான் ஞானத் தங்கமே..
அவன் ஊழ்வினை என்ன சொல்வேன் ஞானத்தங்கமே !
' நஞ்சினை நெஞ்சில் வைத்து
நாவினில் அன்பு வைத்து
நல்லவன் போல் நடிப்பான்.. ஞானத்தங்கமே!
அவன் நாடகத்தை என்ன சொல்வேன்
ஞானத்தங்கமே !
மேலோட்டமாக ... விஷமதியை மனதில் கொண்டு வாயினிக்க பேசி நடிப்பவன் சிவன்.. இவனை நீ காணவேண்டுமா.. வேடிக்கையான வார்த்தைப் பிரயோகம்.
ஆனால் உட் பொருள்... விஷத்தை தேவர்களுக்காக அண்டு ..பார்வதியால் கழுத்திலேயே வைத்துக் கொண்ட நீலகண்டன் .. அவனே உலக நாடகத்தை
நடத்துபவன் ... இனம் கண்டுகொள்.
சித்தர் தமிழ்ப்பாடல்கள் அவர்க்குத் தந்த ..சொல்லாற்றல்.
அடுத்து ,
' தொண்டுக்கென்றே அலைவான்
கேலிக்கு ஆளாவான் .. கண்டு கொள்வாய்
அவனை ஞானத்தங்கமே..
அவன் கடவுளில் பாதியடி ஞானத்தங்கமே !
பிள்ளையைக் கிள்ளிவிட்டுத்
தொட்டி லை ஆட்டிவிட்டு
தள்ளி நின்றே சிரிப்பான்
ஞானத்தங்கமே!
அவன்தான் தரணியைப் படைத்தாண்டி
ஞானத்தங்கமே!
ஊரில் சேவை சேவை என்று அடுத்தவர்க்கு உதவி விட்டு ..தானே சிக்கலில் மாட்டி .. மற்றவர் உதவி நாடும் வகையில் கேலிக்கு ஆளாவான் அந்த சிவன்... இவன் திறத்தைப் பார்த்துக் கொள்.
உட்பொருள்... தன்னை நினைத்து தவம் இருந்தவர்க்கெல்லாம் மனம் இரங்கி ..கேட்கும் வரம் அளித்து... பின் அவர்களாலேயே துன்பப் படுவது.
இங்கு செட்டி நாட்டில் அன்று வேடிக்கையாகப் பேசும் பழக்கம் உண்டு.
சிவபெருமான் ஏமாந்து வரங்களை அள்ளித் தரவேண்டியது... பெருமாள் அவதாரம் எடுத்து காப்பாற்ற வேண்டியது.
இது புராணக்கதைகளில் பரவலாகக் காணப்படும். அதுவே இங்கு சுவைபட ச் சொல்லப்பட்டு ள்ளது..
இறுதியில் கவியரசர் சொல்லும் சேதி..
தரணியைப் படைத்த கடவுள் அவனே...சிவனாகி நின்றவன்..வேடிக்கையாக
பிள்ளையைக் கிள்ளி விட்டு .. வீழ்ந்துபட விடாமல் .. காத்து நிற்கும் குணத்திலே..கடவுள் பாதி...
மீதி நம் யூகத்திற்கு... அது நாம் ஞான முக்தி பெறும் வழி
பாடல் ஒரு பக்தி ரசம்.. தமிழுக்கே உள்ள தனி நடையில்..

No comments:

Post a Comment