Search This Blog
Saturday, October 15, 2011
அனுபவ முத்திரைகள்: பார் மகளே பார்
அனுபவ முத்திரைகள்: பார் மகளே பார்: ஒரு சிறிய ,அறியாத வயதில் நம்மில் எப்படி பட்ட குணங்கள் வெளிப்படுகின்றன என்ற ஒரு உண்மையை எனக்கு உணர்த்திய படம். இரு குடும்ப நண்பர்கள் பற்றி ...
பார் மகளே பார்
ஒரு சிறிய ,அறியாத வயதில் நம்மில் எப்படி பட்ட குணங்கள் வெளிப்படுகின்றன என்ற ஒரு உண்மையை எனக்கு உணர்த்திய படம். இரு குடும்ப நண்பர்கள் பற்றி தொடங்கி ...அந்த ஒருவனுக்கு உண்மையை வாழ்க்கை முறையில் உணர்த்தும் படம். இதில் சிவாஜி ஒரு அகங்கார திமிர் பிடித்த தனவந்தராய் அறிமுகமாவார். தன்பிள்ளை , கொடுத்த அதிரசத்தை ருசித்து அருமை என்றவர் அது ஒரு ஏழை தொழிலாளி வீட்டில் செய்தது என்று அறிந்ததும் தன வாயை கழுவுவார்....மனம் நொந்தது.இப்படியும் உண்டோ என்று. சக நண்பன் பொருள் யாவும் தொலைத்து நிற்கையில் அவமதிப்பர்......இப்படியும் வாழும் வகை உண்டோ என்று என் சிறிய மனது அதிர்ந்து போனது இன்றும் பசுமையாக நினைவில் உள்ளது. பின்னர் கதை அவர் பாசத்துடன் வளர்த்த பிள்ளையே வேறு ஒருவர் பெற்ற பிள்ளை என்று அறியும் போது .....மனம் துடித்து .,மாறுகின்ற நிலை உணர்த்துவதாய் இருக்கும்
மற்றையவை; என்னை தொட்டு சென்றன கண்கள் .........
பார் மகளே பார் ,நீ இல்லாத மாளிகையை...
அவள் பறந்துபோனாளே ........
மதுரா நகரில் தமிழ்சங்கம் .....
Tuesday, October 4, 2011
அனுபவ முத்திரைகள்: தேனிலவு
அனுபவ முத்திரைகள்: தேனிலவு: முதல் முதலாக மன மகிழ்வுடனே இறுதிவரை பார்த்த,மறுமுறையும் பார்க்க வைத்த படம்.கதை சாதரணமானதுதான்.சின்ன,சின்ன குழப்பங்கள் ,கதையை சோகமயமாக்காமல...
தேனிலவு
முதல் முதலாக மன மகிழ்வுடனே இறுதிவரை பார்த்த,மறுமுறையும் பார்க்க வைத்த படம்.கதை சாதரணமானதுதான்.சின்ன,சின்ன குழப்பங்கள் ,கதையை சோகமயமாக்காமல் ,நகைச்சுவை உணர்வுடன் நகர்த்தி சென்றதில் இயக்குனர் ஸ்ரீதருக்கு வெற்றியே.நான் அறிய தமிழ் படங்களில் இவ்வளவு அழகாக வேறு எந்த படமும் காஷ்மீரை காண்பித்தது இல்லை.தங்கவேலு,சரோஜா காமெடி இன்றும் நம்மை சிரிக்க வைப்பது ஆகும்.குறிப்பாக தட்டு கொண்டு படகு ஓட்டுவது மறக்க முடியாத ஒன்று.பாடல்கள் அருமை .ராஜாவின் இசை இறக்குமதியானாலும் கண்ணதாசன் வரிகளுடன் மனதை கவர்பவை. வைஜயந்தி பாடுவதாக அமைந்த ..'மலரே மலரே தெரியாதோ..' ,ஜெயந்தி பாடுவதான 'ஊரெங்கும் தேடினேன் ஒருவரைக் கண்டேன்..' இன்றும் எல்லோர் நினைவிலும் அசை போடுவன.
ஹிட்டான பாடல்கள்: ஓஹோ எந்தன் பேபி,
பாட்டு பாடவா ,பார்த்து பேசவா.
காலையும் நீயே,மாலையும் நீயே..... பாடலில் ஹம்மிங் ஜானகி குரலில் அழகாக இருக்கும்.
Subscribe to:
Posts (Atom)