ஒரு சொல் ஆளுமை
ஒரு சொல் அல்லது தொடர் எடுத்தாளுமை நம் தமிழ்த் திரைப் படப் பாடல்களில் நிறைய உண்டு.சமீப காலங்களில் எடுத்தாளுமைபற்றி இங்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஆசை.
ரோஜா படம் எடுத்தால் சின்ன சின்ன ஆசை ஓடி வரும் வைரமுத்துவின் வரிகளில் , முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை.... அந்த அளவிற்கு நுணுக்கமாய் ஆசைகளை பகுத்தறிந்து சொல்லியிருப்பார்.
ஒற்றை நாணயம்
ஆனந்தம் படத்தில், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம் .. என்று அவ்வண்ணம் காணும் ரூபங்களை அடுக்கிச் செல்வார்
ஞாபகம் வருதே
ஒரு இளமைக் கால நினைவுகளை அடுக்கடுக்காய் ,நல்ல ரசனையோடு
ஞாபகம் வருதே ..என்று ஒரு நல்ல ஏக்கத்தின் பிரதி பலிப்பாய் கொண்டுசெல்வார். '.... ஞாபகம் வருதே முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு,
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு... பழகிய நீச்சல், 'பழகிய சைக்கிள் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்..... என்று வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாண்டி வந்த அனுபவங்கள் கோர்த்து சொல்லப் பட்டிருக்கும்
ஞாபகங்கள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் உள்ளபடியே ஞாபகங்கள் தாலாட்டிச் செல்லும் , ' ஏதோ ஒரு பாட்டு ..என்ற பாட்டில்
கேட்டேன்
அமர்க்களம் படத்தில் ...சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் ..பாட்டில் விரக்திகள் வாழ்வில் ஒருவனுக்கு எப்படியெல்லாம் வருமோ அவையெல்லாம் பட்டியல் போடப் பட்டிருக்கும். '........சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன், சின்ன வயதில் புத்தகம் கேட்டேன்......' இவை போராட்டக்காரனின் விரக்தியை என்ன நேர்த்தியாய் உரைக்கின்றன. http://www.youtube.com/watch?v=6cStcpd_pe4&feature=player_detailpage
ஒரு சொல் அல்லது தொடர் எடுத்தாளுமை நம் தமிழ்த் திரைப் படப் பாடல்களில் நிறைய உண்டு.சமீப காலங்களில் எடுத்தாளுமைபற்றி இங்கு எடுத்துக் கொண்டுள்ளேன்.
ஆசை.
ரோஜா படம் எடுத்தால் சின்ன சின்ன ஆசை ஓடி வரும் வைரமுத்துவின் வரிகளில் , முத்து முத்து ஆசை முடிந்து வைத்த ஆசை.... அந்த அளவிற்கு நுணுக்கமாய் ஆசைகளை பகுத்தறிந்து சொல்லியிருப்பார்.
ஒற்றை நாணயம்
ஆனந்தம் படத்தில், 'பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன் ஒற்றை நாணயம்...
இரவில் ஒருநாள் பௌர்ணமி பார்த்தேன் ஒற்றை நாணயம் .. என்று அவ்வண்ணம் காணும் ரூபங்களை அடுக்கிச் செல்வார்
ஞாபகம் வருதே
ஒரு இளமைக் கால நினைவுகளை அடுக்கடுக்காய் ,நல்ல ரசனையோடு
ஞாபகம் வருதே ..என்று ஒரு நல்ல ஏக்கத்தின் பிரதி பலிப்பாய் கொண்டுசெல்வார். '.... ஞாபகம் வருதே முதல் முதல் வாழ்ந்த கிராமத்து வீடு,
முதல் முதல் ஆக்கிய கூட்டாஞ்சோறு... பழகிய நீச்சல், 'பழகிய சைக்கிள் முதல் வகுப்பெடுத்த மல்லிகா டீச்சர்..... என்று வாழ்க்கையில் ஒவ்வொருவரும் தாண்டி வந்த அனுபவங்கள் கோர்த்து சொல்லப் பட்டிருக்கும்
ஞாபகங்கள்
உன்னிடத்தில் என்னைக் கொடுத்தேன் படத்தில் உள்ளபடியே ஞாபகங்கள் தாலாட்டிச் செல்லும் , ' ஏதோ ஒரு பாட்டு ..என்ற பாட்டில்
கேட்டேன்
அமர்க்களம் படத்தில் ...சத்தம் இல்லாத தனிமை கேட்டேன் ..பாட்டில் விரக்திகள் வாழ்வில் ஒருவனுக்கு எப்படியெல்லாம் வருமோ அவையெல்லாம் பட்டியல் போடப் பட்டிருக்கும். '........சாகும் வயதில் பொம்மைகள் கேட்டேன், சின்ன வயதில் புத்தகம் கேட்டேன்......' இவை போராட்டக்காரனின் விரக்தியை என்ன நேர்த்தியாய் உரைக்கின்றன. http://www.youtube.com/watch?v=6cStcpd_pe4&feature=player_detailpage
