நடிகவேள் எம்.ஆர்.ராதா .
தமிழ் திரைப்பட உலகில் ,தனக்கென்று ஒரு பாவம் , தனி வழி, சிந் தனையிலும் சரி பேச்சுத்திறத்திலும் யாரும் சார்ந்திடாத ஒரு போக்கை தமக்கென்று வைத்துக் கொண்டு வெற்றியுடன் தமிழ்த் திரைவானில்
நடிகவேள் எம்.ஆர்.ராதா .பரிமளித்தவர் என்றால் மிகையில்லை. அதுதான் உண்மை. திராவிட கழக இயக்கத்தவர் ஆதலால் சமுதாய மூட நம்பிக்கைகளைக் கடுமையாக தன் வசனத்தில் எப்படியேனும் அள்ளி வீசுவார்; அது பலன் அளித்தது என்றால் அதுவும் உண்மை. இத்தனைக்கும் அவர் ஒரு நல்லவராகவோ, கதானாயகராகவோ வேடம் ஏற்பதில்லை .நகைச் சுவை வில்லனாகவே பெரும்பாலும் வருவார் .அப்படியிருந்தும் இது சாத் தியமான தென்றால் அவர் சிந்தனையிலும்,பேச்சுத்திறத்திலும் அபார சக்தி இறந்ததை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.
இரத்தக் கண்ணீரில் மேல்நாட்டு நாகரிகத்தில் மூழ்கி நம் நற்பண்புகளைப் பழிப்பார். ஆனால் அதைக் கேட்கும் நாம் சிரிக்கத்தான் செய்வோம்;ஆனால் கோபப்படமாட்டோம். அதனூடே சாத்திரம் பொய் என்று மூட நம்பிக்கையைத் தூற்றும் இளக்காரம் நம்மிடம் உறைக்கத்தான் செய்யும்; அந்த முயற்சி வெற்றியும் கொண்டது. பலே பாண்டியாவில் நகைசுவையாக ,மாமா மாப்ளே ...என்று சிவாஜியுடன் அடிக்கும் கொட்டம் இன்றும் போற்றத் தகுந்தது.
ஹலோ மிஸ்டர் ஜமீந்தாரில் ...'சொந்தமுமில்லே ஒரு பந்தமுமில்லே ,சொன்ன இடத்தில் அமர்ந்து கொள்கிறான்...'என்று சலூனுக்கு வருபவரின் செயல் பாடுகளை நயமான நகைச்சுவையுடன் அவர் பாடிக் கழிப்பதை எப்படி மறப்பது. வில்லத்தனமான நடிப்பு பெரும்பாலும் எம்.ஜி.ஆர். உடன்தான்.நிஜ வாழ்விலும் அது எதிரொலித்தது ஏனோ தெரியவில்லை. வில்லன் என்றால் அடிதடி வில்லனாய் அதிகம் இடம்பெறாது ,சதித் திட்டம் போட்டே ,முகத்தை இருளடங்கியது போன்று மாற்றிக் காண்பிப்பது இவருக்கே கைவந்த கலை. நகைச் சுவை, வில்லத் தனம் , குணசித்திரம், தனித்திறம் கொண்ட இவரது பேச்சு ஆக எல்லாவற்றிலும் தன சுய சிந்தனையாய் மூட நம்பிக்கைகளைச் சாடி விஞ்ஞானத்தைப் போற்றத் தவறியதில்லை. இன்னும் ஞா பக்கத்தில் நிறைய உண்டு...இன்றைய தலை முறையினர் அது பற்றி தெரிந்திருப்பரோ என்ற சந்தேகம் எழவே இக்கட்டுரையும் பிறந்து விட்டது.

No comments:
Post a Comment