திரைப் படம் என்றாலே ஏதோ ஒரு கதை, பாடல், சண்டை ,சுபம் என்ற அளவுகோலே மேலீட்டிருந்த காலத்தில் , சில உன்னத உணர்வுகளுக்கே மதிப்பளிக்கும்படி கதை அமைத்து , படம் முடிந்தும் மக்கள் மனதில் தாக்கம் ஏற்படுத்திய முதல் பெருமை, டைரக்டர் ஸ்ரீரிதருக்கே பொ
ருந்தும். இந்தவகையில் நான் முதன் முதலில் அவரைஅடையாளம் கண்டது 'நெஞ்சில் ஓர் ஆலயம்' படத்தில்தான். அந்த சிறு வயதில் கல்யாணகுமார் மேல் பரிதாபமும் ,தேவிகா மேல் வெறுப்பும் வரும். பின்னாளில் தேவிகா ,சொன்னது நீதானா...பாடலில் உருக்கம் புரிந்தது. நிழல்படத்தை மறைத்து வைக்கும் தவிப்பும் என்ன அழகாக எடுதிருந்திருக்கிறார். இதன் பிறகே கல்யாணப் பரிசு பற்றி அறிந்து கொண்டேன். சரோஜா தேவி தன அக்காவின் ஊமைக் காதலுக்கு காதலனை தியாகம் செய்து, இறுதியில் அவனும் தனிமரமாய், தங்கள் குழந்தையை அவரிடமே அவரது திருமணப் பரிசாய் அ ளிப்பது.... காவியத்தன்மை அன்றி வேறேதுமில்லை. அதுவும்...பள்ளி இறுதி ஆண்டில் தேர்வில் ஏதோ ஒரு சினிமா விமரிசனம் நல்ல கதையோடு கேள்வி கேட்கப்படும் வழக்கம் இருந்தது. பெரும்பாலும் எல்லா கைடுகளிலும் இந்தப் படத்தின் விமரிசனமே தந்திருக்கப்படும். அந்தக் கதையின் நேர்த்தி என்று பின்னாளில் புரிந்தது. விட்டுக்கொடுத்த பண்பு மூலதனமாகக் கொண்ட கதை என்றால் அவ்வப் பொழுது எழும் உணர்வு போராட்டங்களைச் சித்தரிப்பது எளிதல்லவே. அதை இவர் செய்தார். அதுமட்டுமல்ல தமிழ்க் கதைக்கே உண்டான வகையில் நியாயத் தீர்ப்பும் கதைகளில் ,சொல்லிவரும் அழகில் கண்டிருப்பார். கலைக்கே அர்பணிப்பாக மீண்ட சுவர்க்கம், கலைக் கோயில் படங்கள் தோல்வி கண்டாலும் பாடல்கள் அனைத்தும் எல்லாக் காலங்களிலும் எல்லார் மனதிலும்.அசைபோடுபவன . இவருக்கு உருகவைக்கத்தான் தெரியும்...என்ற பெயரை தேனிலவு...நகைச்சுவையாய் காஷ்மீர் பின்னணியில் அழகுற எடுத்தது தகர்த்தது. காதலிக்க நேரமில்லை....நான் அதிகம் சொல்ல வேண்டாம்...இன்றும் வெற்றியில் உள்ளதே. அவளுக்கென்று ஓர் மனம் சுமார். பின்னாளில், இவர் வழக்கம் போல் சில கலைஞரைப் போல் கஷ்டப் பட்ட நிலையில், உரிமைக்குரல் எம்.ஜி.ஆர்.ஐ வைத்து எடுத்து கடன் மீண்டார். புதுமுகங்கள் , காஞ்சனா, ராஜஸ்ரீ, ஸ்ரீகாந்த், ஜெயலலிதா, ரவிச்சந்திரன், இன்னும் இருக்கலாம். நாகேஷ் நெஞ்சில் ஓர் ஆலயம் பின்னரே பிரபலம் ஆனார். வெண்ணிற ஆடை ஜெயலலிதாவிற்கு முதல் படமே வெற்றிப் படம் என்றாயிற்று.இவரது சித்ராலயா பல காவியப் படங்களைத் தந்தது என்றால் மிகை இல்லை.
No comments:
Post a Comment